சாத்தான்குளம் காவல் மரணம் வழக்கில் 9 போலீசார் குற்றவாளிகள் – நீதிமன்றம் கடும் கண்டனம் மதுரை: தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் காவல் மரணம் வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. இருவரின் மரணமும் இயல்பானது அல்ல, காவல் துறையினரின் தாக்குதலால் ஏற்பட்ட கொலை என நீதிமன்றம் உறுதியாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், தந்தை
Category: குற்றம்
மருத்துவர் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிநேரத்தில் மருத்துவர் இல்லாததால், நான்கரை வயது சிறுவன் உயிரிழந்ததாக பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது. உடல்நலக் குறைவு ஏற்பட்ட சிறுவனை குடும்பத்தினர் அவசரமாக கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, அங்கு மருத்துவர் பணியில் இல்லாததாக கூறப்படுகிறது. உடனடி சிகிச்சை கிடைக்காமல் காலதாமதம் ஏற்பட்டதால் சிறுவன் உயிரிழந்ததாக குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கண்ணனூர்
தொப்பை கணேசன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை
சென்னை, மார்ச் 16: சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே போலீசார் நடத்திய என்கவுண்டரில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த தொப்பை கணேசன் என்ற குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஜனவரி 30ஆம் தேதி, மாதவரம் ரவுண்டானா அருகே நடந்த வழிப்பறி சம்பவத்தில் ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர
எஸ்.பி.கைது பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
கோவை, மார்ச் 15– கோவைப்புதூர் 4–வது பட்டாலியனில் பணியாற்றி வந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் எஸ்.பி. செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கோவைப்புதூர் 4–வது காவல் பட்டாலியனில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு, அதே பட்டாலியனில் பணியாற்றி வந்த எஸ்.பி. செந்தில்குமார் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர், சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
5 ஆண்டுகளில் 8,752 கொலைகள் – பெண்கள், குழந்தைகள் பலி:
சென்னை, மார்ச் 11: கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மொத்தம் 8,752 கொலைகள் நடந்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் அதிக கொலை வழக்குகள் பதிவான மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொலைகளில் 1,977 பெண்களும், 367 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். அதில் 38 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த
அரசு அலுவலகங்களில் அடையாள அட்டை அணியாத அதிகாரிகள் – பொதுமக்கள் அதிருப்தி.
சென்னை, மார்ச் 11: தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றும் சில அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தங்களது அடையாள அட்டையை (ID Card) கழுத்தில் தொங்கவிடாமல் பணியில் ஈடுபடுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள், தங்களது தேவைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க அதிகாரிகளை எளிதில் அடையாளம் காண முடியாத நிலை உருவாகியுள்ளது. பல அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களது அடையாள
‘போக்குவரத்து பிளாசா’ திட்டத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு! CRZ விதிகள் மீறல் குற்றச்சாட்டு – திட்டத்தை உடனே கைவிட மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
ராமநாதபுரம், மார்ச் 9: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளை மீறி அமைக்கப்பட உள்ள “போக்குவரத்து பிளாசா” (Transport Plaza) திட்டத்திற்கு எதிராக, அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்டத்தை உடனடியாக கைவிடக் கோரி இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் ஆட்சேபனை மனு அளித்தனர். திட்டத்தின் பின்னணி ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி சர்வே எண்
“ப்ரீ பையர்” கேம் பெயரில் சிறுவர்கள் ஆபாச வார்த்தைகள் – பெண்கள் நடமாட்டத்தில் அச்சம்; காவல்துறையிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சென்னை: வடசென்னையில் உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல குடியிருப்பு பகுதிகளில் சிறுவர்கள் “ப்ரீ பையர்” எனப்படும் ஆன்லைன் கேமை விளையாடும் போது, மிகவும் கொச்சையான மற்றும் ஆபாசமான வார்த்தைகளை உரக்கப் பயன்படுத்தி பேசும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பள்ளி வயதுடைய சிறுவர்கள் குழுக்களாகச் சேர்ந்து மொபைல் போன்களில் இந்த கேமை விளையாடும்போது, அதில் பயன்படுத்தப்படும் ஆபாசமான மற்றும் அருவருப்பான சொற்களை வெளிப்படையாகப்
மாநகரப் பேருந்தில் நடத்துநர் மீது நடவடிக்கை.
சென்னை: சென்னை மாநகரப் பேருந்தில் சில்லறை விவகாரம் தொடர்பாகப் பயணியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நடத்துநர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து போக்குவரத்து நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதுடன், கட்டணத்தை UPI மூலம் செலுத்த முன்வந்த பயணியிடம் ஒருமையில் பேசி அவமரியாதையாக நடந்துகொண்டதோடு, பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரயில் நிலையத்தில் 41 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு.
சென்னை, மார்ச் 3: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் பயணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் 41 திருநங்கைகள் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரயில் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், சிலரிடம் ஆபாசமாக பேசி சிரமம் ஏற்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் அரசு ரயில்வே போலீசார் இணைந்து நிலைய வளாகத்தில் கண்காணிப்பு மேற்கொண்டனர். கண்காணிப்பின் போது, பயணிகளுக்கு இடையூறு

