நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த கைதி சபரிவர்மன் மரணம் தொடர்பாக சிறை வார்டன் உட்பட மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில், அவரது உடலில் மொத்தம் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைகள், கால்கள் மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயங்கள் இருந்ததோடு, வலது கையில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உடற்கூறாய்வு அறிக்கையைத் தொடர்ந்து,
Category: குற்றம்
திமுக நிர்வாகி மீது கொலை முயற்சி: 3 பேர் கைது
சென்னை: தண்டையார்பேட்டை பகுதியில் திமுக நிர்வாகி ராஜா (45) மீது வீட்டு வாசலிலேயே அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜா உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (44), ரஞ்சித் (33),
உயிர்தப்பிய இளம் பெண் – மாஞ்சா நூலால்.
திருவொற்றியூரில் பரபரப்பு சென்னை: திருவொற்றியூரில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்ற இளம் பெண்ணின் முகத்தில் திடீரென குறுக்கே வந்த மாஞ்சா நூல் மூக்குப் பகுதியில் அறுத்து காயம் ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வலியால் அவதிப்பட்டாலும், தலைக்கவசம் அணிந்திருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். தமிழகத்தில் மாஞ்சா நூல் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை அமலில் இருந்தாலும், சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் மாஞ்சா நூலால் அடிக்கடி விபத்துகள்
பட்டப்பகலில் வீட்டின் பின்கதவை உடைத்து 5 சவரன் நகை கொள்ளை; வாலிபர் கைது.
சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள ஒரு வீட்டில், கடந்த 29-ஆம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பூஜை அறையில் இருந்த 5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு
ரூ.20 கோடி மோசடி: இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது
சென்னையில் குறைந்த விலையில் தங்கக்காசுகள் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் இருந்து சுமார் ரூ.20 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) ஷீலா மேரியை போலீசார் கைது செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்கக்காசுகள் கிடைக்கச் செய்வதாக நம்பிக்கை அளித்து, பல்வேறு நபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு
கணவருக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கூலிப்படையால் கொலை; மனைவி, காதலன் கைது.
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில், கணவரின் உணவில் தூக்க மாத்திரை கலந்து மயக்கமடையச் செய்த மனைவி, காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை வாழ்ந்த அப்பலநாயுடு, மனைவி ஹேமாவின் திருமணத்திற்குப் புறம்பான உறவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஹேமாவும் அவரது காதலன் கங்காதரும் இணைந்து கொலைத் திட்டம் தீட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தூக்கத்தில் இருந்த அப்பலநாயுடுவை கூலிப்படையினர் கழுத்தை
புழல் சிறையில் ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய சதி!
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை சதிக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ரவுடி லாலி மணிகண்டன் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவருடன் தொடர்புடைய மேலும் 3 பேரும் சதியில் தொடர்புடையவர்கள் என தெரியவந்த நிலையில், அவர்கள் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து இளைஞர் வெட்டிக் கொலை: 8 பேர் கைது.
சென்னை நொளம்பூர் பகுதியில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையாக மாறியது. 8 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சஞ்சய் (25) என்ற இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இந்த தாக்குதலில் சஞ்சயின் தந்தை முருகதாஸ் மற்றும் சகோதரர் சரத் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை வழக்கில் தப்பியோட முயன்றதாகக் கூறப்படும் ரூபேஷை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மேலும்,
போதைக்கு பணம் தர மருத்த, தாய்மாமனை அடித்துக் கொலை.
சென்னை வியாசர்பாடி ஏரிக்கரை ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் மது அருந்த பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் தாய் மாமனை தாக்கி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறுகையில், அப்பகுதியில் வசித்து வந்த முருகன் (50) என்பவரிடம் அவரது உறவினரான பவித்ரன் (30) மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த
ரூ.2 கோடி காப்பீட்டு பணத்திற்காக கணவருக்கு விஷ ஊசி: மனைவி, கள்ளக்காதலன் கைது.
திருப்பதி, ஜூன் 16: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சந்தீப் (46) தனது பெயரில் ரூ.2 கோடி காப்பீடு எடுத்திருந்தார். கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், காப்பீட்டு தொகையை கைப்பற்றும் நோக்கில் அவரது மனைவி சுமா மற்றும் அவரது கள்ளக்காதலன் புண்டலிகா டோம் பர் ஆகியோர் இணைந்து திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி,

