சென்னையில் குறைந்த விலையில் தங்கக்காசுகள் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் இருந்து சுமார் ரூ.20 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) ஷீலா மேரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்கக்காசுகள் கிடைக்கச் செய்வதாக நம்பிக்கை அளித்து, பல்வேறு நபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், பணம் பெற்ற பிறகும் வாக்குறுதியளித்தபடி தங்கக்காசுகள் வழங்கப்படவில்லை என்றும், பணத்தையும் திருப்பி தரவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, மேலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மோசடி செய்யப்பட்ட பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

