சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதல் நடவடிக்கை..!

சென்னையில் பெண்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் அதிரடிப்படை மூலம் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் சுரேஷ் என்பவரை, அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்ட பிறகு பதிவான முதல் வழக்கு என்பதால் இந்த

Read More

அமைச்சர் குறித்து அவதூறு வழக்கு – யூடியூபர் மாரிதாஸுக்கு நிபந்தனை ஜாமீன்.

அமைச்சர் கீர்த்தனா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ்க்கு சென்னை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்டதாக சென்னை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மாரிதாஸ் பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ரூ.10,000

Read More

பெண் காவலரிடம் 97 சவரன் மோசடி – சரித்திர பதிவேடு குற்றவாளி கைது நடவடிக்கை.

சென்னை: மணலி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவர், சரித்திர பதிவேடு குற்றவாளியால் நகை, பணம் மற்றும் கார் உள்ளிட்டவற்றை இழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.   2024ஆம் ஆண்டு பணியின் போது, வழக்கு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்த சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி “அப்பு” எனப்படும் சிவராமன் என்பவருடன் பெண் காவலருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில்

Read More

“ஆணுறுப்பை வெட்டினேன்” பெரம்பூர் சூட்கேஸ் கொலை வழக்கில் மனைவி பகீர் வாக்குமூலம்.

சென்னை பெரம்பூரில் சூட்கேஸில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட பரபரப்பு சம்பவத்தில், கொலை செய்யப்பட்டவர் அமீர் அலி என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் அவரது மனைவி மற்றும் அஸ்ராம் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில், அமீர் அலியின் மனைவி அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில், “அமீர் அலி எனக்கு இரண்டாவது கணவர். பல பெண்களுடன் அவர் தொடர்பில் இருந்தார். முதல் திருமண வாழ்க்கை குறித்து பேசியதற்காக என்னை

Read More

சூட்கேசில் தலை துண்டிக்கப்பட்ட சடலம்: மனைவி மற்றும் ஆண் நண்பர் அதிரடி கைது!

சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கொலையானவரின் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பரபரப்பு பின்னணி சென்னை பெரம்பூர் ரயில் நிலைய வளாகத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் கேட்பாரற்று கிடந்த ஒரு சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ

Read More

மாணவிக்கு பாலியல் சீண்டல் – போலீஸ் ஏட்டு கைது

சென்னை, ஜூன் 6– கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற ரயில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வந்தபோது, சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கோவையைச் சேர்ந்த தலைமை காவலர் சேக் அப்துல்லா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சேக் அப்துல்லாவை பணியிடைநீக்கம் செய்தனர். இதனிடையே, கைது நடவடிக்கையைத் தவிர்க்க சேக்

Read More

வாக்குவாதம் முற்றி கத்திக்குத்து: பெண்ணின் தந்தை காயம்

சென்னை, ஜூன் 6 – சென்னை கொடுங்கையூரில் ஆட்டோவும் ஸ்கூட்டியும் மோதியதில் ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்து சம்பவமாக மாறியது. ஸ்கூட்டியை ஓட்டிவந்த வாஹிதாவுக்கும், ஆட்டோ ஓட்டுநர் பாலா என்பவருக்கும் இடையே விபத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த வாஹிதாவின் தந்தை ரஹீம் (40) வாக்குவாதத்தில் தலையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் பாலா, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஹீமை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த

Read More

“லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நேர்மையானவர் தான் இருக்க வேண்டும்” – உயர்நீதிமன்றம் கருத்து.

தனியார் கட்டுமான நிறுவனரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது தொடர்பாக, ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு எதிரான வழக்கை விசாரித்தபோது உயர்நீதிமன்றம் முக்கிய கருத்தை பதிவு செய்தது. அதில், லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் பதவியில் நற்பெயர் மற்றும் நேர்மை கொண்ட அதிகாரிகளே நியமிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், உயர்ந்த பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகள் பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும்

Read More

சட்டவிரோத சூதாட்டம் – 5 பேர் கைது ரூ.80.58 லட்சம் பணம், சீட்டுக்கட்டுகள் பறிமுதல்.

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 நபர்களை தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.   தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிலர் பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.   இதையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.   அப்போது, பணம் வைத்து சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பேரை போலீசார் கைது

Read More

புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி – உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

பழனி, மே 28: புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகோபால் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு, ஒரு பெண் தனது பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடம் விசாரணை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் ராஜகோபால், பின்னர் அந்த

Read More

Facebook