காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து கடும் கண்டனம் – 90 சதவீதம் ஊழல்வாதிகள்.
சென்னை, பிப்.14: சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்யப்பட்ட ஒரு அவமதிப்பு மனுவை முடித்து வைத்து வழங்கிய தீர்ப்பில், நீதிபதி பி.வேல்முருகன் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கருத்துக்களை பதிவு செய்தார். தற்போதைய நிலையில் காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவோ அல்லது குற்றவியல் விசாரணைகளை திறம்பட நடத்த போதுமான திறன் இல்லாதவர்களாகவோ உள்ளனர் என்றும், 10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையும் திறமையும் கொண்டவர்களாக செயல்படுகின்றனர் என்றும்
ஏழு பேருக்கு மறுவாழ்வளித்த 14 வயது சிறுவன் – குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு
திருச்சி, திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். மருத்துவக் குழுவினர் மூளைச்சாவை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சிறுவனின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் கல்லீரல், கணையம், சிறுகுடல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்கள் மற்றும் தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதில் ஒரு
ஆர்.கே.நகர் தொகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் தினந்தோறும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி ஊழியர்கள் வீடு தோறும் சென்று புகை மூட்டுதல், கொசு வளரக்கூடிய இடங்களில் மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. கொசு மூலம் பரவும்
உரிமை கோரப்படாத அனாதை பிணங்களுக்கு மரியாதை – சமூக சேவையாளருக்கு ஆளுநர் விருது
திருச்சிராப்பள்ளி, ஜன.26 : உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிரேதங்களுக்கு மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளருக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஆளுநர் விருது வழங்கப்பட்டது. சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது, மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. அமிர்தம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருக்கு விருது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக
1152 போதை மாத்திரைகள், 60 கிராம் கஞ்சா பறிமுதல் –
விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிரடி சோதனை 1152 போதை மாத்திரைகள், 60 கிராம் கஞ்சா பறிமுதல் – வடமாநில இளைஞர் கைது விழுப்புரம் | செய்தியாளர் விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில், விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் போலீசார் தொடர் கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஹோட்டல் அண்ணாமலை புறவழிச்சாலை சந்திப்பு அருகே கஞ்சா மற்றும் போதை
சென்னையில் அதிகரிக்கும் ரவுடிசம் | மக்களிடையே அச்சம்
சென்னை: சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில், சாலையை மறித்து கத்தியால் கேக் வெட்டிய ரவுடி கும்பலை தட்டிக் கேட்ட பொதுமக்கள் மீது, அந்த கும்பல் அரிவாள்களுடன் ஓட ஓட தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நேற்று நடந்தது. இந்த தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த உடனேயே அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனிடையே, கீழ்ப்பாக்கம் பகுதியில் நேற்று ஒரு ரவுடி வெட்டி கொல்லப்பட்ட
ரவுடி வெடிக் கொலை – உதவி ஆணையர், காவல் ஆய்வாளருக்கு மெமோ
சென்னை | ஜனவரி 13 நேற்று (12.01.2026) சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரவுடி ஒருவர் வெடிக் கொலப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொ*லைச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்ததாகக் கூறப்படும் கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் துரை மற்றும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் ஆகிய இருவருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் மெமோ வழங்கியுள்ளனர். மருத்துவமனை போன்ற உயர் பாதுகாப்பு


