தந்தையின் வேலை கிடைத்தும் நிலைக்காத நிம்மதி

சென்னை: ரயில்வேயில் வேலை செய்த தந்தை ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில், வாரிசு அடிப்படையில் கிடைத்த வேலைக்கு சென்றபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற மகனும் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திலகர் நகரை சேர்ந்த வேணுகோபால் கடந்த 2023ஆம் ஆண்டு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் கிஷோர் குமாருக்கு கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி வாரிசு

Read More

ஹரி பிரபுவுக்கு ‘ரத்தன் டாடா தொலைநோக்குச் சின்னம் விருது’ வழங்கப்பட்டது

சென்னை: சமூக சேவைக்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டு வரும் ஹரி பிரபு அவர்களுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான ‘ரத்தன் டாடா தொலைநோக்குச் சின்னம் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மனோகரா பூபதி அறக்கட்டளை மூலம் இலவச உணவு மற்றும் கல்வி வழங்கி வரும் இவரது சேவையைப் பாராட்டி, ஜீவ்ரான் அறக்கட்டளை இந்த உயரிய விருதை வழங்கிக் கௌரவித்துள்ளது. “முதலில் தட்டை நிரப்புவோம், பிறகு புத்தகத்தைத் திறப்போம்” என்ற நோக்கத்தில் இவர் ஆற்றி

Read More

ஜப்பான் 100 மோன் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு.

திருச்சி, ஏப். 5– திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஜப்பான் 100 மோன் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கி பேசுகையில், நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் போன்ற பரிமாற்ற ஊடகங்களை சேகரித்தல், அவற்றை ஆய்வு செய்தல் மற்றும் வரலாற்று பின்னணியை ஆராய்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றார். மேலும், நாணயங்களின் உற்பத்தி

Read More

வாகன விபத்தில் மூளைச்சாவு – 42 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்.

தென்காசி, ஏப்.4: தென்காசி மாவட்டம் குலையனேரியைச் சேர்ந்த சீதையம்மாள் (42) வாகன விபத்தில் பலத்த காயமடைந்தார். விபத்துக்குப் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களின் முயற்சிகள் பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சீதையம்மாளின் குடும்பத்தினர் மனிதநேய உணர்வுடன் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புதல் அளித்தனர். மருத்துவ குழுவினர் சட்ட விதிமுறைகளின்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவரது உடல் உறுப்புகள் தேவையுள்ள நோயாளிகளுக்கு மாற்று

Read More

வாக்கு விற்காதீர் – ஜனநாயகத்தை காப்போம்! பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம் என மக்கள் சக்தி இயக்கம் விழிப்புணர்வு.

புதுக்கோட்டை, ஏப்.4: ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை பணம் மற்றும் பொருளுக்காக விற்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் புதுக்கோட்டை மூன்றாவது தெரு பேருந்து நிறுத்தம் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை உணர்ந்து நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. “எனது வாக்கு எனது உரிமை”, “என் வாக்கு விற்பனைக்கு இல்லை”,

Read More

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு – ரூ.10,000 நிதியுதவி

புதுக்கோட்டை, ஏப். 4: மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய குடும்பத்தினரை மக்கள் சக்தி இயக்கத்தினர் பாராட்டி நிதியுதவி வழங்கினர். புதுக்கோட்டை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த க. பாண்டியன் (36) வண்ணம் பூசும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அறந்தாங்கி பகுதியில் வேலைக்குச் சென்றபோது தவறி கீழே விழுந்து காயமடைந்தார். முதலில் அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார்

Read More

காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் கைது. மனமகிழ் மன்ற உரிமையாளரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம்

திண்டுக்கல் பைபாஸ் சாலையில் மனமகிழ் மன்றம் நடத்தும் உரிமையாளரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் (32) லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். மனமகிழ் மன்றத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கூறி, மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிமையாளர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டபோது, மறைந்திருந்த

Read More

போலி ஆவணம்: ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு – ஓராண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது.

சென்னை, ஏப். 3: சென்னை தேனாம்பேட்டையில் தொழிலதிபர் தாராசந்த் என்பவருக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள 1,262 சதுரடி நிலத்தை போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில், தொழிலதிபரின் தாயாரைப் போன்ற ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரித்ததுடன், அந்தப் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.3.03 கோடி கடன் பெற்று ஏமாற்றியுள்ளனர். வங்கி அதிகாரிகள்

Read More

வியாபாரிகள் சங்க நிர்வாகியின் தாயார் காலமானார்: பாலகுருசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி.

வியாபாரிகள் சங்க நிர்வாகியின் தாயார் காலமானார்: பாலகுருசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி.     சென்னை, ஏப். 2- வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்க நிர்வாகியின் தாயார் மறைவுக்கு சங்க நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மறைவு: சென்னை காலிங்கராயன் தெருவைச் சேர்ந்தவர் A.V.கருணாகரன். இவர் வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் முக்கிய நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவருடைய தாயார் V.சண்முகத்தாய்

Read More

பொதுமக்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 23-ந்தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அதிரடி உத்தரவு.

பொதுமக்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 23-ந்தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அதிரடி உத்தரவு.     சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசு மிக முக்கியமான அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23-ந்தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது. அன்று காலை 7:00 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6:00

Read More

Facebook