எஸ்.பி.கைது பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
கோவை, மார்ச் 15– கோவைப்புதூர் 4–வது பட்டாலியனில் பணியாற்றி வந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் எஸ்.பி. செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கோவைப்புதூர் 4–வது காவல் பட்டாலியனில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு, அதே பட்டாலியனில் பணியாற்றி வந்த எஸ்.பி. செந்தில்குமார் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர், சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.


