ஆயுள் கைதிகள் முன்விடுதலை: விரைந்து பரிசீலிக்க கோரிக்கை.

சென்னை:தமிழ்நாட்டில் நன்னடத்தை, குறிப்பிட்ட கால சிறைவாசம், வயது மற்றும் உடல்நிலை உள்ளிட்ட தகுதிகளை நிறைவு செய்தும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஆயுள் கைதிகளின் முன்கூட்டிய விடுதலை மனுக்களை புதிய அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிறை நிர்வாகத்தின் பரிந்துரை இருந்தும் பல மனுக்கள் மீது முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், கைதிகளின் குடும்பத்தினர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். எனவே, “அனைவருக்குமான ஆட்சி” என்ற நோக்கத்துடன்

Read More

காமராஜர் குறித்து அவதூறு பேச்சு: டிஜிபி அலுவலகத்தில் புகார்.

சென்னை, ஜூலை 22: பெருந்தலைவர் காமராஜர் குறித்து தரக்குறைவாக பேசியதாக குற்றம் சாட்டப்படும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த எம்.எஸ். அருணாசலம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு நாடார் சங்கங்கள் சார்பில் இன்று (22.07.2026) சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்படுகிறது. இந்த புகார் மனுவை மின்னல் ஸ்டீபன் நாடார், முத்துரமேஷ் நாடார், சாமுவேல் திரவியம் நாடார், விஜயசந்திரன் நாடார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பல நாடார்

Read More

ரூ.50 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தல். 4 பேர் கொண்ட கும்பல் கைது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொழிலதிபர் கமலேஷ் ஆபிரகாம் என்பவரை காரில் கடத்தி, ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். பாரிமுனையில் பாத்திரக் கடை நடத்தி வரும் கமலேஷ், நேற்று காலை நேரு பூங்கா பகுதியில் கடத்தப்பட்டார். பின்னர் ரூ.50 லட்சம் கேட்ட கும்பல், இறுதியில் ரூ.30 லட்சம் தர வேண்டும் என கூறி, 5 சவரன் நகையையும் பறித்துக் கொண்டு பணத்தை எடுத்து

Read More

சிறப்பு காவல்படை கமாண்டன்ட் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு. வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.28 கோடி சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு.

கோவை, தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 4-வது பட்டாலியன் சஸ்பெண்ட் கமாண்டன்ட் செந்தில்குமார், தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.28 கோடி மதிப்பிலான சொத்துகளை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ரெட்டையார்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார், 1997-ஆம் ஆண்டு எஸ்.ஐ.யாக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று, கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 4-வது பட்டாலியன் கமாண்டன்டாக 2022 முதல் பணியாற்றி வந்தார். கடந்த

Read More

காவல்துறை உதவி ஆய்வாளர் கைது. அரசு சாட்சியை கொல்ல சதி.

திருப்பூர்: தாராபுரம் ஐகோர்ட் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கில் புகார்தாரரும் முக்கிய அரசு சாட்சியுமான தங்கவேலை கொலை செய்ய முயன்ற வழக்கில், உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு போலீஸ் படை எஸ்.ஐ. சரவணன் (52) கைது செய்யப்பட்டார். கடந்த 7-ஆம் தேதி டூவீலரில் சென்ற தங்கவேலை காரில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே நந்தகுமார், பாபு, சரஸ்வதி, ஹேமா

Read More

சிறையில் விசாரணைக் கைதி மரணம். சிறைக் காவலர்கள் தாக்கி இருக்கலாம்.

சென்னையில் குட்கா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த பெட்டிக்கடை உரிமையாளர் பாலாஜி திடீரென உயிரிழந்தார்.   மாரடைப்பால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், சிறைக் காவலர்கள் தாக்கியதால்தான் மரணம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More

காவலர் கைது. இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.

கோவை: வெள்ளக்கிணறு பகுதியில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை விசாரணை என்ற பெயரில் தனியாக அழைத்துச் சென்ற காவலர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண், அழுதபடியே தனது நண்பரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதையடுத்து உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவலர் வினோத் குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

கணவன் கண்முன்னே தாய், 6 மாத மகள் பலி மாதவரம் ரவுண்டானா அருகே கண்டெய்னர் லாரி மோதி பரிதாபம்

சென்னை, ஜூலை 18: சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே இன்று நிகழ்ந்த கோர சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும், 6 மாத பெண் குழந்தையும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   நித்தியானந்தம் (36), அவரது மனைவி ஷர்மிளா (28) மற்றும் 6 மாத மகள் பிரதிக்ஷாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி பைக்

Read More

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நியாயமாக நடைபெறுகிறது, உயர்நீதிமன்றம் கருத்து.

சென்னை: அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நியாயமாக நடைபெறுவதாகவே தெரிகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதி முகமது சபீக் கருத்து தெரிவித்துள்ளார். அரசு வழக்கறிஞர் தற்காலிக நியமனங்களில் திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பரிசீலிக்கப்படுவதாக மனுதாரரே தெரிவித்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக தவெக நிர்வாகிகள் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முதலமைச்சர் விஜய்

Read More

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன் கொலை. கோயிலுக்கு அழைத்துச் சென்று தீர்த்துக்கட்டிய மனைவி; காதலனுடன் தப்பிய இருவரும் கைது.

கிருஷ்ணகிரி: திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்ததாகக் கூறி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று கணவனை மனைவி மற்றும் அவரது காதலன் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில், யாசினி (20) கோயிலுக்கு செல்லும் வழியிலேயே தனது காதலன் யுகேந்தர் (20)-க்கு லைவ் லொகேஷன் அனுப்பி வரவழைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சேர்ந்து கணவனை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு,

Read More

Facebook