அனைவரும் விசாரணை வளையத்தில்!
சென்னை, ஆக. 6– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த புகாரின் பேரில் ஆய்வாளர் புகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மற்றொரு ஆய்வாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த உதவி ஆணையர் முதல் காவலர் வரை 100-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசாரின் செயல்பாடுகள் குறித்தும், அவர்கள் மீது வேறு ஏதேனும் முறைகேடு அல்லது புகார்கள் உள்ளனவா


