கராத்தே போட்டியில் மாணவி அனுஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

பரமக்குடி: சென்னை துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில், ஓபன் குமிட்டே பிரிவில் பரமக்குடி ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி குரு அனுஸ்ரீ கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார். தேசிய அளவிலான கராத்தே வீராங்கனையான குரு அனுஸ்ரீ, தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார். இந்த வெற்றியின் மூலம் அவர் 34-வது முறையாக பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி அனுஸ்ரீயின் சாதனையைப்

Read More

சிறைவாசிகளின் உணவு, மருத்துவம், நிர்வாகம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் — சிறைகளில் மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என முன்னாள் சிறைவாசிகள் கோரிக்கை!

சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு, மருத்துவ வசதிகள், சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டு அறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய சிறைகள், கிளைச் சிறைகள் உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல ஆயிரக்கணக்கான சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைவாசிகளும் மனிதர்களே! சட்டப்படி தண்டனை அனுபவிக்கும் ஒருவரின் சுதந்திரம் மட்டுமே

Read More

முதல் இந்தியர்! பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை!

அமெரிக்காவில் நடைபெற்ற Grand Chess Tour சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவின் இளம் செஸ் வீரர் ஆர். பிரக்ஞானந்தா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இப்பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீரர் ஃபேபியானோ கருவானாவிடம் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்த பிரக்ஞானந்தா, பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி கம்பேக் கொடுத்தார். இறுதியில் 15–13 புள்ளிகள் என்ற கணக்கில் வெற்றி பெற்று

Read More

பிரியாணியில் புழு: வாடிக்கையாளர் அதிர்ச்சி! கடை உரிமையாளரிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என புகார் — போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என ஆதங்கம்

சென்னை: சென்னை சிட்கோ 2-வது பிரதான சாலையில் இயங்கி வரும் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். சிட்கோ 2-வது பிரதான சாலையில் உள்ள அந்த உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பிரியாணி வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அப்போது பிரியாணியில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக உணவக நிர்வாகத்திடம் இதுகுறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், தனது புகாரை

Read More

வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!   தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் கிளை சங்கமான வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கம் சார்பில், வி நியூஸ் தமிழ் இன்டர்நேஷனல் வெப்சைட் நியூஸ் சேனலின் செய்தியாளர்  ம.அந்தோணி பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சென்று சால்வை அணிவித்து, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் செய்தி தொடர்பாளர் அ.வினோபாஜி கலந்து கொண்டு, செய்தியாளர் ம.அந்தோணி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரது

Read More

வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கம். எம்.எம்.கோபிக்கு வாழ்த்து.

சென்னை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம். எம். கோபி அவர்களுக்கு, வடசென்னை பொது வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, மேலும் பல உயரங்களை அடைய வேண்டும் என சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதையொட்டி, வடசென்னை பொது வியாபாரிகள் நலச் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் அ. வினோபாஜி,

Read More

1930 — இணையவழி நிதி மோசடிக்கு உடனடி உதவி எண்! பணம் மோசடி செய்யப்பட்டால் உடனடியாக 1930-க்கு அழைக்கலாம் — தாமதிக்காமல் புகார் அளித்தால் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள முடியும்!

இந்தியாவில் இணையவழி நிதி மோசடி மற்றும் சைபர் குற்றங்களைப் புகாரளிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) சார்பில் 1930 என்ற தேசிய கட்டணமில்லா உதவி எண் செயல்பட்டு வருகிறது. இந்த உதவி எண் மூலம் குறிப்பாக UPI மோசடி, இணையவழி வங்கி மோசடி, கிரெடிட்/டெபிட் கார்டு மோசடி, நெட் பேங்கிங் மோசடி உள்ளிட்ட நிதி சார்ந்த சைபர் குற்றங்களை உடனடியாகப்

Read More

காவல் நிலையத்தில் நடப்பதை பொதுமக்கள் பதிவு செய்யலாமா? காவல்துறையின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் — நீதிமன்றங்கள் வலியுறுத்தல்!

காவல் நிலையம் என்பது சட்டத்திற்கு அப்பாற்பட்ட இடம் அல்ல. காவல்துறை அதிகாரம் செலுத்தும் இடமாக இருந்தாலும், அங்கு நடைபெறும் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மனித உரிமைகளுக்கும் உட்பட்டவையே. காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் அளிக்கும்போது, விசாரணைக்கு அழைக்கப்படும்போது அல்லது காவல்துறை நடவடிக்கையை எதிர்கொள்ளும்போது அதிகார துஷ்பிரயோகம், மிரட்டல், கட்டாயப்படுத்தல் அல்லது மனித உரிமை மீறல் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதே நீதிமன்றங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையாக

Read More

“ஏன் முடியாது?” — உழைக்கும் மக்களின் உரிமைக்கான கேள்வி. “எம்.எல்.ஏ. உதவியாளருக்கு ரூ.25,000 சம்பளம் வழங்க வேண்டும் என்று நினைக்கும் முதலமைச்சரால், தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 ஊதியம் வழங்க ஏன் முடியாது?”

“எம்.எல்.ஏ.க்கள் ஆட்டோவில் வருகிறோம் என்று கூறியவுடன், அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு கார் வழங்க முடிகிறது. ஆனால், நகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் சாதாரண உழைக்கும் மக்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில் மட்டும் என்ன பிரச்னை?” இது வெறும் ரூ.25,000 சம்பளம் குறித்த கேள்வி அல்ல… உழைப்புக்கு வழங்கப்படும் மரியாதை குறித்த கேள்வி. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசின் முன்னுரிமைகள் யாருக்காக? அதிகாரத்தில் இருப்பவர்களின் வசதிகளுக்கா? அல்லது அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்

Read More

காலிஃபிளவர் தடை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உத்தரவுக்கு பொதுமக்கள் கடும் கேள்வி!

ஒரு சில ஓட்டல்களில் புகார் வந்ததற்காக ஒட்டுமொத்த ஓட்டல்களிலும் காலிஃபிளவர் உணவுகளுக்குத் தடை விதிப்பதா? திருமலை திருப்பதியில் உள்ள ஓட்டல்களில் காலிஃபிளவர் உணவு வகைகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது பொதுமக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. சில ஓட்டல்களில் காலிஃபிளவரில் புழுக்கள் இருந்ததாகத் தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, கோபி ரைஸ், காலிஃபிளவர் பக்கோடா, மஞ்சூரியன் உள்ளிட்ட காலிஃபிளவர் உணவு வகைகளை ஓட்டல்களில் தயாரித்து விற்பனை செய்ய தற்காலிகமாகத் தடை

Read More

Facebook