காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு மரியாதை வழங்கப்பட வேண்டும்! ஏழை, எளிய மக்கள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை.
காவல் நிலையங்களுக்கு தங்களது குறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது. கடந்த காலங்களில் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் சில காவலர்கள் ஏளனமாக பேசுவதும், ஒருமையில் அழைப்பதும், அவர்களின் குறைகளை அலட்சியமாக அணுகுவதும் இருந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காலப்போக்கில் இந்த நிலை ஓரளவு மாறி வந்தாலும், இன்னும்


