மருத்துவர் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிநேரத்தில் மருத்துவர் இல்லாததால், நான்கரை வயது சிறுவன் உயிரிழந்ததாக பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது. உடல்நலக் குறைவு ஏற்பட்ட சிறுவனை குடும்பத்தினர் அவசரமாக கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, அங்கு மருத்துவர் பணியில் இல்லாததாக கூறப்படுகிறது. உடனடி சிகிச்சை கிடைக்காமல் காலதாமதம் ஏற்பட்டதால் சிறுவன் உயிரிழந்ததாக குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கண்ணனூர்

Read More

ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ராமநாதபுரம்: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000-க்கு மேல் ரொக்கம் எடுத்துச் செல்லப்பட்டால் அது பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை முன்னிட்டு 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாக அவர் தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள 1,514 வாக்குச்சாவடிகளில் தேர்தல்

Read More

பள்ளியில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.

ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அல் கலம் சர்வதேச பள்ளியில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்கி வரும் இந்த பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி, பள்ளி நிறுவனர் ஷேக் அப்துல் காதர் குத்தூஸ் அஸ் காரி அவர்களின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டது. பள்ளி தாளாளர் அப்துல் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர்

Read More

பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர் கான் தலைமையிலும், தமுமுக மாவட்ட செயலாளர் ஆசிக் சுல்தான் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய கவுன்சிலர்

Read More

கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்.

ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஏர்வாடி எஸ்.ஏ.பி.எம்.எச் அரசு மேல்நிலைப்பள்ளி துணைத் தலைமை ஆசிரியை முகமது சாரா சமீமத் ஆலியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிரின் முன்னேற்றம் மற்றும் சமூகத்தில் பெண்களின் பங்கு குறித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் முகமது சதக்

Read More

தமிழக வெற்றி கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திமுக அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகம் தலைவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையிலும், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பாபு லத்தீப் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சாதி வெறி ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும், மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருட்கள் பரவலை

Read More

தொப்பை கணேசன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

சென்னை, மார்ச் 16: சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே போலீசார் நடத்திய என்கவுண்டரில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த தொப்பை கணேசன் என்ற குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஜனவரி 30ஆம் தேதி, மாதவரம் ரவுண்டானா அருகே நடந்த வழிப்பறி சம்பவத்தில் ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர

Read More

எஸ்.பி.கைது பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

கோவை, மார்ச் 15– கோவைப்புதூர் 4–வது பட்டாலியனில் பணியாற்றி வந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் எஸ்.பி. செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கோவைப்புதூர் 4–வது காவல் பட்டாலியனில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு, அதே பட்டாலியனில் பணியாற்றி வந்த எஸ்.பி. செந்தில்குமார் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர், சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

Read More

இறந்தும் உயிர் வாழ்கிறார். மோனிக்ராஜ்.

கோவை: சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த 24 வயதுடைய இளைஞர் மோனிக் ராஜ் அவர்களின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக வழங்கி மனிதநேயத்தின் உயர்ந்த எடுத்துக்காட்டை உருவாக்கியுள்ளனர். விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த மோனிக் ராஜ் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் மனிதாபிமான மனப்பான்மையுடன் இதயம், சிறுநீரகங்கள் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை தானமாக அளிக்க சம்மதித்தனர். அவரது உடல் உறுப்புகள்

Read More

5 ஆண்டுகளில் 8,752 கொலைகள் – பெண்கள், குழந்தைகள் பலி:

சென்னை, மார்ச் 11: கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மொத்தம் 8,752 கொலைகள் நடந்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் அதிக கொலை வழக்குகள் பதிவான மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொலைகளில் 1,977 பெண்களும், 367 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். அதில் 38 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த

Read More

Facebook