சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதல் நடவடிக்கை..!

சென்னையில் பெண்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் அதிரடிப்படை மூலம் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் சுரேஷ் என்பவரை, அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்ட பிறகு பதிவான முதல் வழக்கு என்பதால் இந்த

Read More

கராத்தே போட்டியில் 33 பதக்கங்கள் வென்ற பரமக்குடி மாணவி; முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற விருப்பம்.

ராமநாதபுரம் மாவட்டம், காரடர்ந்தகுடியைச் சேர்ந்த குரு அனுஸ்ரீ, பரமக்குடி ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக தற்காப்புக் கலையான கராத்தேவில் சிறப்பாகப் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகிறார். தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் பங்கேற்றுள்ள குரு அனுஸ்ரீ, அகில இந்திய அளவிலான போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Read More

உதவி கரம் நீட்டிய உதவி ஆய்வாளர் திருமலை – ஏழை மாணவிக்கு பள்ளி பை வழங்கி கல்விக்கு ஊக்கம்.

சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் திருமலை, மனிதநேய செயலில் அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். ஆர்.கே. நகர் பகுதியில் வசித்து வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் கல்வி பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர் பள்ளிக்குச் செல்ல தேவையான பள்ளி பை (School Bag) ஒன்றை வழங்கியுள்ளார். குடும்பத்தின் நிலையை உணர்ந்து தாமாக முன்வந்து உதவிய உதவி ஆய்வாளர் திருமலை,

Read More

இந்திய பொம்மலாட்ட அஞ்சல் தலைகளில் வடிவமைப்பு பிழைகள் குறித்து ஆய்வு.

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் “இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்பு பிழைகள்” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு திருச்சியில் நடைபெற்றது. நிகழ்வில் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமையிலான இந்நிகழ்வில் நிறுவனர் நாசர், ஜலால், அன்பழக பாண்டியன், முகமது சுபேர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு சொற்பொழிவாளராக பங்கேற்ற தஞ்சை காசிநாத், அஞ்சல் தலை சேகரிப்பாளர்களின் (Philatelists) நுணுக்கமான ஆய்வு முறைகள் குறித்து

Read More

அமைச்சர் குறித்து அவதூறு வழக்கு – யூடியூபர் மாரிதாஸுக்கு நிபந்தனை ஜாமீன்.

அமைச்சர் கீர்த்தனா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ்க்கு சென்னை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்டதாக சென்னை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மாரிதாஸ் பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ரூ.10,000

Read More

பெண் காவலரிடம் 97 சவரன் மோசடி – சரித்திர பதிவேடு குற்றவாளி கைது நடவடிக்கை.

சென்னை: மணலி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவர், சரித்திர பதிவேடு குற்றவாளியால் நகை, பணம் மற்றும் கார் உள்ளிட்டவற்றை இழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.   2024ஆம் ஆண்டு பணியின் போது, வழக்கு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்த சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி “அப்பு” எனப்படும் சிவராமன் என்பவருடன் பெண் காவலருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில்

Read More

நார்வே செஸ் தொடரை வென்ற பிரக்ஞானந்தா. இந்த தொடரை வென்ற முதல் இந்தியர்

சென்னையைச் சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, நார்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற Norway Chess 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். இந்த தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.   இதையடுத்து C. Joseph Vijay தனது வாழ்த்துச் செய்தியில், “நார்வே செஸ் 2026 தொடரில் வெற்றி பெற்று முதல் இந்தியராக சாதனை படைத்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு எனது இதயம் கனிந்த

Read More

“ஆணுறுப்பை வெட்டினேன்” பெரம்பூர் சூட்கேஸ் கொலை வழக்கில் மனைவி பகீர் வாக்குமூலம்.

சென்னை பெரம்பூரில் சூட்கேஸில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட பரபரப்பு சம்பவத்தில், கொலை செய்யப்பட்டவர் அமீர் அலி என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் அவரது மனைவி மற்றும் அஸ்ராம் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில், அமீர் அலியின் மனைவி அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில், “அமீர் அலி எனக்கு இரண்டாவது கணவர். பல பெண்களுடன் அவர் தொடர்பில் இருந்தார். முதல் திருமண வாழ்க்கை குறித்து பேசியதற்காக என்னை

Read More

சூட்கேசில் தலை துண்டிக்கப்பட்ட சடலம்: மனைவி மற்றும் ஆண் நண்பர் அதிரடி கைது!

சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கொலையானவரின் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பரபரப்பு பின்னணி சென்னை பெரம்பூர் ரயில் நிலைய வளாகத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் கேட்பாரற்று கிடந்த ஒரு சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ

Read More

மாணவிக்கு பாலியல் சீண்டல் – போலீஸ் ஏட்டு கைது

சென்னை, ஜூன் 6– கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற ரயில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வந்தபோது, சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கோவையைச் சேர்ந்த தலைமை காவலர் சேக் அப்துல்லா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சேக் அப்துல்லாவை பணியிடைநீக்கம் செய்தனர். இதனிடையே, கைது நடவடிக்கையைத் தவிர்க்க சேக்

Read More

Facebook