மாணவிக்கு பாலியல் சீண்டல் – போலீஸ் ஏட்டு கைது

சென்னை, ஜூன் 6– கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற ரயில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வந்தபோது, சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கோவையைச் சேர்ந்த தலைமை காவலர் சேக் அப்துல்லா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சேக் அப்துல்லாவை பணியிடைநீக்கம் செய்தனர். இதனிடையே, கைது நடவடிக்கையைத் தவிர்க்க சேக்

Read More

வாக்குவாதம் முற்றி கத்திக்குத்து: பெண்ணின் தந்தை காயம்

சென்னை, ஜூன் 6 – சென்னை கொடுங்கையூரில் ஆட்டோவும் ஸ்கூட்டியும் மோதியதில் ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்து சம்பவமாக மாறியது. ஸ்கூட்டியை ஓட்டிவந்த வாஹிதாவுக்கும், ஆட்டோ ஓட்டுநர் பாலா என்பவருக்கும் இடையே விபத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த வாஹிதாவின் தந்தை ரஹீம் (40) வாக்குவாதத்தில் தலையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் பாலா, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஹீமை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த

Read More

டிஜிட்டல் முறையில் ஆதரவு திரட்ட புதிய வெப்சைட் தொடக்கம்: “என் கட்சியில் இணையுங்கள்” என அழைப்பு!

சென்னை, ஜூன். 5 – தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வாக, புதிய அரசியல் இயக்கத்தை அறிவித்த கையோடு, டிஜிட்டல் முறையில் தமக்கான ஆதரவைத் திரட்டும் அதிரடிப் பணிகளில் அண்ணாமலை களமிறங்கியுள்ளார். இதற்காக பிரத்யேக இணையதளம் ஒன்றும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் புதிய பாதையில் பயணிக்கப் போவதாக அண்மையில் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த புதிய அரசியல் இயக்கத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில், தற்போது தொழில்நுட்பப் புரட்சியை அவர்

Read More

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.

பா.ஜ.க.,வில் இருந்து விலகும் K. Annamalai-ன் முடிவை தேசிய தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. பா.ஜ.க., Bharatiya Janata Party அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், அவரது ராஜினாமா முடிவுக்கு தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகுவது உறுதியாகியுள்ளது.

Read More

கலைஞர் 103-வது பிறந்தநாள் விழா: ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து.

திருவொற்றியூர்: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவொற்றியூரில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவொற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் மற்றும் முன்னாள் மாநகராட்சி 5-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.பி. சொக்கலிங்கம் ஆகியோர், தி.மு.க. நிர்வாகிகளுடன் இணைந்து கே.வி.கே. குப்பம், விம்கோ நகர் மற்றும் சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கலைஞரின் திருஉருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை

Read More

“லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நேர்மையானவர் தான் இருக்க வேண்டும்” – உயர்நீதிமன்றம் கருத்து.

தனியார் கட்டுமான நிறுவனரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது தொடர்பாக, ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு எதிரான வழக்கை விசாரித்தபோது உயர்நீதிமன்றம் முக்கிய கருத்தை பதிவு செய்தது. அதில், லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் பதவியில் நற்பெயர் மற்றும் நேர்மை கொண்ட அதிகாரிகளே நியமிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், உயர்ந்த பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகள் பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும்

Read More

சட்டவிரோத சூதாட்டம் – 5 பேர் கைது ரூ.80.58 லட்சம் பணம், சீட்டுக்கட்டுகள் பறிமுதல்.

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 நபர்களை தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.   தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிலர் பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.   இதையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.   அப்போது, பணம் வைத்து சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பேரை போலீசார் கைது

Read More

புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி – உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

பழனி, மே 28: புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகோபால் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு, ஒரு பெண் தனது பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடம் விசாரணை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் ராஜகோபால், பின்னர் அந்த

Read More

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தலைமைக் காவலர் போக்சோவில் கைது

சென்னை, மே 28: சென்னை கோடம்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 11 வயது சிறுவனுக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை அளித்ததாக வடபழனி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோடம்பாக்கம் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 11 வயது சிறுவனிடம், மதுபோதையில் இருந்த தலைமைக் காவலர் தவறான முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

Read More

பள்ளிக்கரணையில் இலவச கண் சிகிச்சை முகாம்: 52 பேருக்கு பரிசோதனை; 8 பேருக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை!

சென்னை, மே 28: சென்னை பள்ளிக்கரணையில் உள்ள மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாவது இலவச கண் சிகிச்சை முகாம் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்ட் சென்டர், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நோபல் ஹார்ட் மற்றும் செட்டிநாடு மருத்துவமனை ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் இந்த முகாம் நடத்தப்பட்டது. கடந்த 24/05/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்ற இந்த

Read More

Facebook