மழை வடிகால் கழிவுகள் உடனடியாக அகற்ற கோரிக்கை நோய்த்தொற்று அபாயம்:
சென்னை: வரவிருக்கும் மழைக்காலத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் தேங்கியுள்ள கழிவுகளை ஊழியர்கள் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வடிகால் கால்வாய்களில் இருந்து அள்ளப்படும் கழிவுகள் சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்டு, அப்பகுதிகளில் நடைபாதைகளில் வைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த கழிவுகள் சில நாட்களுக்குப் பிறகு சாக்கு மூட்டைகளில் இருந்து வெளியேறி சாலைகளிலும் நடைபாதைகளிலும் சிதறுவதுடன், கடும் துர்நாற்றமும் வீசுவதாக கூறப்படுகிறது. இதனால்


