சென்னையில் மீண்டும் பயங்கரம் — சாலையில் வைத்து வெறிச்செயல்
சென்னை திருவொற்றியூர் பகுதியில் சாலையில் வைத்து பிரதீப் என்ற இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் பிரதீப்பை தாக்கி, அவரது தலையை சிதைக்கும் வகையில் கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை


