சிறைவாசிகளின் உணவு, மருத்துவம், நிர்வாகம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் — சிறைகளில் மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என முன்னாள் சிறைவாசிகள் கோரிக்கை!
சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு, மருத்துவ வசதிகள், சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டு அறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய சிறைகள், கிளைச் சிறைகள் உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல ஆயிரக்கணக்கான சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைவாசிகளும் மனிதர்களே! சட்டப்படி தண்டனை அனுபவிக்கும் ஒருவரின் சுதந்திரம் மட்டுமே


