“ஆரோக்கிய சமூகத்திற்கு சமூக அமைப்புகள் அவசியம்”
சென்னை, மே 12: சென்னை அனுவ்ரத் சமிதி சார்பில் “ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் சமூக அமைப்புகளின் பங்கு” என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி புரசைவாக்கத்தில் உள்ள C.U. ஷா பவனில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக அனுவ்ரத் கீதம் பாடப்பட்டது. பின்னர் சமிதியின் தலைவர் திருமதி சுபத்ரா லுனாவத் வரவேற்புரை வழங்கி, விருந்தினர்களை கௌரவித்தார். நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட JITO சென்னை தலைவர்


