சிறையில் விசாரணைக் கைதி மரணம். சிறைக் காவலர்கள் தாக்கி இருக்கலாம்.
சென்னையில் குட்கா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த பெட்டிக்கடை உரிமையாளர் பாலாஜி திடீரென உயிரிழந்தார். மாரடைப்பால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், சிறைக் காவலர்கள் தாக்கியதால்தான் மரணம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


