பெண் காவலர் ரேவதி – தைரியமான சாட்சியால் குற்றவாளிகள் சிக்கினர்.
சாத்தான்குளம் பென்னிக்ஸ் வழக்கு: உண்மைக்கு துணைநின்ற காவல் பெண் ரேவதி – தைரியமான சாட்சியால் குற்றவாளிகள் சிக்கினர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த பென்னிக்ஸ் வழக்கில், உண்மையை மறைக்காமல் மனசாட்சிக்கு உண்மையாக சாட்சி அளித்த காவல் துறை பெண் அதிகாரி ரேவதி பாராட்டுக்குரியவராக திகழ்கிறார். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகள் என்ற எந்தவித பயமும் இன்றி, தாம் அணிந்திருந்த காவல் சீருடையின் மரியாதையை காக்கும் விதமாக அவர் தைரியமாக உண்மை


