டிஜிட்டல் முறையில் ஆதரவு திரட்ட புதிய வெப்சைட் தொடக்கம்: “என் கட்சியில் இணையுங்கள்” என அழைப்பு!

சென்னை, ஜூன். 5 – தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வாக, புதிய அரசியல் இயக்கத்தை அறிவித்த கையோடு, டிஜிட்டல் முறையில் தமக்கான ஆதரவைத் திரட்டும் அதிரடிப் பணிகளில் அண்ணாமலை களமிறங்கியுள்ளார். இதற்காக பிரத்யேக இணையதளம் ஒன்றும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் புதிய பாதையில் பயணிக்கப் போவதாக அண்மையில் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த புதிய அரசியல் இயக்கத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில், தற்போது தொழில்நுட்பப் புரட்சியை அவர்

Read More

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.

பா.ஜ.க.,வில் இருந்து விலகும் K. Annamalai-ன் முடிவை தேசிய தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. பா.ஜ.க., Bharatiya Janata Party அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், அவரது ராஜினாமா முடிவுக்கு தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகுவது உறுதியாகியுள்ளது.

Read More

கலைஞர் 103-வது பிறந்தநாள் விழா: ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து.

திருவொற்றியூர்: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவொற்றியூரில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவொற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் மற்றும் முன்னாள் மாநகராட்சி 5-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.பி. சொக்கலிங்கம் ஆகியோர், தி.மு.க. நிர்வாகிகளுடன் இணைந்து கே.வி.கே. குப்பம், விம்கோ நகர் மற்றும் சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கலைஞரின் திருஉருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை

Read More

“லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நேர்மையானவர் தான் இருக்க வேண்டும்” – உயர்நீதிமன்றம் கருத்து.

தனியார் கட்டுமான நிறுவனரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது தொடர்பாக, ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு எதிரான வழக்கை விசாரித்தபோது உயர்நீதிமன்றம் முக்கிய கருத்தை பதிவு செய்தது. அதில், லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் பதவியில் நற்பெயர் மற்றும் நேர்மை கொண்ட அதிகாரிகளே நியமிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், உயர்ந்த பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகள் பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும்

Read More

சட்டவிரோத சூதாட்டம் – 5 பேர் கைது ரூ.80.58 லட்சம் பணம், சீட்டுக்கட்டுகள் பறிமுதல்.

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 நபர்களை தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.   தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிலர் பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.   இதையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.   அப்போது, பணம் வைத்து சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பேரை போலீசார் கைது

Read More

புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி – உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

பழனி, மே 28: புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகோபால் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு, ஒரு பெண் தனது பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடம் விசாரணை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் ராஜகோபால், பின்னர் அந்த

Read More

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தலைமைக் காவலர் போக்சோவில் கைது

சென்னை, மே 28: சென்னை கோடம்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 11 வயது சிறுவனுக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை அளித்ததாக வடபழனி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோடம்பாக்கம் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 11 வயது சிறுவனிடம், மதுபோதையில் இருந்த தலைமைக் காவலர் தவறான முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

Read More

பள்ளிக்கரணையில் இலவச கண் சிகிச்சை முகாம்: 52 பேருக்கு பரிசோதனை; 8 பேருக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை!

சென்னை, மே 28: சென்னை பள்ளிக்கரணையில் உள்ள மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாவது இலவச கண் சிகிச்சை முகாம் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்ட் சென்டர், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நோபல் ஹார்ட் மற்றும் செட்டிநாடு மருத்துவமனை ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் இந்த முகாம் நடத்தப்பட்டது. கடந்த 24/05/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்ற இந்த

Read More

24 மணி நேரத்துக்குள் பணம் மீட்பு: ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு காவலர்களின் அதிவேக நடவடிக்கை.

சென்னை, மே 26: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பவர் ஹவுஸ் பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவர் பிளம்பர் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மகனின் பள்ளி கட்டணத்திற்காக வைத்திருந்த ரூ.31,200/- பணத்தை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், உடனடியாக ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் ஆலோசனையின் பேரில் காவலர் இருளப்பன் சம்பவம் நடந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா

Read More

“ஆரோக்கிய சமூகத்திற்கு சமூக அமைப்புகள் அவசியம்”

சென்னை, மே 12: சென்னை அனுவ்ரத் சமிதி சார்பில் “ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் சமூக அமைப்புகளின் பங்கு” என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி புரசைவாக்கத்தில் உள்ள C.U. ஷா பவனில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக அனுவ்ரத் கீதம் பாடப்பட்டது. பின்னர் சமிதியின் தலைவர் திருமதி சுபத்ரா லுனாவத் வரவேற்புரை வழங்கி, விருந்தினர்களை கௌரவித்தார். நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட JITO சென்னை தலைவர்

Read More

Facebook