மாநகரப் பேருந்தில் நடத்துநர் மீது நடவடிக்கை.

சென்னை: சென்னை மாநகரப் பேருந்தில் சில்லறை விவகாரம் தொடர்பாகப் பயணியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நடத்துநர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து போக்குவரத்து நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதுடன், கட்டணத்தை UPI மூலம் செலுத்த முன்வந்த பயணியிடம் ஒருமையில் பேசி அவமரியாதையாக நடந்துகொண்டதோடு, பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Read More

ரயில் நிலையத்தில் 41 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு.

சென்னை, மார்ச் 3: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் பயணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் 41 திருநங்கைகள் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரயில் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், சிலரிடம் ஆபாசமாக பேசி சிரமம் ஏற்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் அரசு ரயில்வே போலீசார் இணைந்து நிலைய வளாகத்தில் கண்காணிப்பு மேற்கொண்டனர். கண்காணிப்பின் போது, பயணிகளுக்கு இடையூறு

Read More

உடனடி நடவடிக்கை. போக்குவரத்து காவலர்கள்.

சென்னை: ஆர்.கே.நகர், தொகுதிக்குட்பட்ட வினோபா நகர் பகுதியில். பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவால், அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில். எச் 5 புது வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவலர்கள் அரை மணி நேரத்தில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோவை அப்புறப்படுத்தியதால், அப்பகுதி மக்கள் போக்குவரத்து காவலர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Read More

தமிழக அரசியலின் ஒளிக்கோப்பு தோழர் இரா. நல்லகண்ணு மறைவு

சென்னை, பிப்ரவரி 23: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான R. Nallakannu (101) இன்று மதியம் 1.55 மணியளவில் சென்னை Rajiv Gandhi Government General Hospital மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், பின்னர் மூச்சுத் திணறல்

Read More

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து கடும் கண்டனம் – 90 சதவீதம் ஊழல்வாதிகள்.

சென்னை, பிப்.14: சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்யப்பட்ட ஒரு அவமதிப்பு மனுவை முடித்து வைத்து வழங்கிய தீர்ப்பில், நீதிபதி பி.வேல்முருகன் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கருத்துக்களை பதிவு செய்தார். தற்போதைய நிலையில் காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவோ அல்லது குற்றவியல் விசாரணைகளை திறம்பட நடத்த போதுமான திறன் இல்லாதவர்களாகவோ உள்ளனர் என்றும், 10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையும் திறமையும் கொண்டவர்களாக செயல்படுகின்றனர் என்றும்

Read More

ஏழு பேருக்கு மறுவாழ்வளித்த 14 வயது சிறுவன் – குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு

திருச்சி, திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். மருத்துவக் குழுவினர் மூளைச்சாவை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சிறுவனின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் கல்லீரல், கணையம், சிறுகுடல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்கள் மற்றும் தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதில் ஒரு

Read More

ஆர்.கே.நகர் தொகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் தினந்தோறும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி ஊழியர்கள் வீடு தோறும் சென்று புகை மூட்டுதல், கொசு வளரக்கூடிய இடங்களில் மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. கொசு மூலம் பரவும்

Read More

உரிமை கோரப்படாத அனாதை பிணங்களுக்கு மரியாதை – சமூக சேவையாளருக்கு ஆளுநர் விருது

திருச்சிராப்பள்ளி, ஜன.26 : உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிரேதங்களுக்கு மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளருக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஆளுநர் விருது வழங்கப்பட்டது. சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது, மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. அமிர்தம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருக்கு விருது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக

Read More

Facebook