முதல்வரை சந்திக்க அனுமதி கோரி எம்.எல்.ஏ.க்கு மனு
ராமநாதபுரம்: தமிழ்நாடு பட்டங்கட்டி கடையர் பேரவை சார்பாக, சமுதாயத்தினர் சாதி சான்றிதழ் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை தீர்க்க தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த தமிழ்நாடு பட்டங்கட்டி கடையர் பேரவை சார்பாக, கிராமத் தலைவர் மற்றும் நிர்வாகத்தினர், சமுதாய நிர்வாகிகள் மற்றும் பெரியோர்கள் இணைந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக


