திருச்சி, ஏப். 5– திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஜப்பான் 100 மோன் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கி பேசுகையில், நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் போன்ற பரிமாற்ற ஊடகங்களை சேகரித்தல், அவற்றை ஆய்வு செய்தல் மற்றும் வரலாற்று பின்னணியை ஆராய்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றார். மேலும், நாணயங்களின் உற்பத்தி
Category: பொழுதுபோக்கு
விடுதலை போராட்ட வீராங்கனை ராணி அவந்திபாய் லோதி நினைவு தினம்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற வீராங்கனை ராணி அவந்திபாய் லோதி அவர்களின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அவர், பெண்களின் தைரியம் மற்றும் தன்னலமற்ற போராட்ட மனப்பாங்கிற்கு அடையாளமாக திகழ்கிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்கர் பிரதேசத்தை ஆட்சி செய்த ராணி அவந்திபாய், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக தன்னுடைய
கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்.
ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஏர்வாடி எஸ்.ஏ.பி.எம்.எச் அரசு மேல்நிலைப்பள்ளி துணைத் தலைமை ஆசிரியை முகமது சாரா சமீமத் ஆலியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிரின் முன்னேற்றம் மற்றும் சமூகத்தில் பெண்களின் பங்கு குறித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் முகமது சதக்
உரிமை கோரப்படாத அனாதை பிணங்களுக்கு மரியாதை – சமூக சேவையாளருக்கு ஆளுநர் விருது
திருச்சிராப்பள்ளி, ஜன.26 : உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிரேதங்களுக்கு மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளருக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஆளுநர் விருது வழங்கப்பட்டது. சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது, மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. அமிர்தம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருக்கு விருது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக
அகில இந்திய வானொலி பண்ணை வானொலி – 60ஆம் ஆண்டு வைர விழா
திருச்சி அகில இந்திய வானொலியின் பண்ணை வானொலி சேவை தொடங்கி அறுபதாம் ஆண்டை நிறைவு செய்ததை முன்னிட்டு, “திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்!” என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில், திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர், யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள்
சிறந்த சமூக சேவகர் – 2025’ விருது வழங்கல்
திருச்சி, டிசம்பர் 17 : பெயர், விலாசம், அடையாளம் தெரியாததும், உரிமை கோரப்படாததும் ஆகிய ஆதரவற்ற அனாதை பிணங்களை மனிதநேயத்துடன், கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளருக்கு ‘சிறந்த சமூக சேவகர் – 2025’ விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் ஆகிய
உறையூர் சோழன்பாறை கல்வெட்டு – காலத்தின் சுவடுகளைச் சொல்லும் மலைக்குன்று
திருச்சிராப்பள்ளி | சிறப்பு செய்தியாளர் திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழு மற்றும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து, “திருச்சி – ஓர் பார்வை, ஓர் பயணம்” என்ற தலைப்பில் மரபு நடைப் பயணத்தை உறையூர் பகுதியில் மேற்கொண்டனர். இந்த பயணத்தில், திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், வரலாற்று ஆசிரியர்
உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறு ஓர் பார்வை! ஓர் பயணம்!
திருச்சியில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறு ஓர் பார்வை! ஓர் பயணம்! திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு சார்பில் திருச்சியில் திருச்சியில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறு ஓர் பார்வை, ஓர் பயணம் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது . தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்க மாநில தலைவர் பன்னீர்செல்வம், மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொதுச்

