சென்னை, ஜூலை 26: மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்ட் சென்டர் சார்பில், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நோபல் ஹார்ட் அமைப்பின் ஒத்துழைப்புடனும், போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவக் குழுவின் பங்களிப்புடனும், பள்ளிக்கரணை மதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 7-வது இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் 106 பேருக்கு கண் பரிசோதனை, 49 பேருக்கு இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை
Category: சமீபத்திய செய்திகள்
ஆயுள் கைதிகள் முன்விடுதலை: விரைந்து பரிசீலிக்க கோரிக்கை.
சென்னை:தமிழ்நாட்டில் நன்னடத்தை, குறிப்பிட்ட கால சிறைவாசம், வயது மற்றும் உடல்நிலை உள்ளிட்ட தகுதிகளை நிறைவு செய்தும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஆயுள் கைதிகளின் முன்கூட்டிய விடுதலை மனுக்களை புதிய அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிறை நிர்வாகத்தின் பரிந்துரை இருந்தும் பல மனுக்கள் மீது முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், கைதிகளின் குடும்பத்தினர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். எனவே, “அனைவருக்குமான ஆட்சி” என்ற நோக்கத்துடன்
ஈ தொல்லையால் மக்கள் அவதி: மாநகராட்சி தீவிர நடவடிக்கை:
சென்னை, ஜூலை 6: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 38-வது வார்டு பகுதிகளான வினோபா நகர், ராஜசேகர் நகர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஈ தொல்லை அதிகரித்து பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையின் மலேரியா பிரிவு ஊழியர்கள் அப்பகுதிகளில் தீவிர சுகாதாரப் பணியில் ஈடுபட்டு, ஈக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஈ மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையால் ஈ தொல்லை குறைந்து, நோய் பரவலைத் தடுக்கவும்
ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளை சார்பில். மாணவ மாணவிகளுக்கு உதவிகள்.
சென்னை: ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளை சார்பில், சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பவானர் பள்ளியில் (LKG முதல் 5-ம் வகுப்பு வரை) பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தலா 2 செட் புதிய பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் கம்பீர்ஜி சோர்டியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிர்வாக அறங்காவலர் மனீஷ் குமார் சவுத்ரி, செயலாளர் சுரேந்திர கோத்தாரி, NSU தலைவர் தர்ஷன் கோத்தாரி மற்றும் உறுப்பினர்கள்
சம்மதத்துடன் கூடிய உறவு தவறல்ல: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
திருமணம் ஆகாத வயது வந்த ஆண், பெண் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் வைத்திருக்கும் உறவை தவறான நடத்தையாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. எல்லாக் காதல் உறவுகளும் திருமணத்தில் முடிவதில்லை என்பதையும், அதற்காக ஒருவரை ஏமாற்றியதாக தானாகவே கருத முடியாது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த இளைஞருக்கு மீண்டும்
பள்ளிக்கரணையில் இலவச கண் சிகிச்சை முகாம்: 52 பேருக்கு பரிசோதனை; 8 பேருக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை!
சென்னை, மே 28: சென்னை பள்ளிக்கரணையில் உள்ள மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாவது இலவச கண் சிகிச்சை முகாம் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்ட் சென்டர், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நோபல் ஹார்ட் மற்றும் செட்டிநாடு மருத்துவமனை ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் இந்த முகாம் நடத்தப்பட்டது. கடந்த 24/05/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்ற இந்த
24 மணி நேரத்துக்குள் பணம் மீட்பு: ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு காவலர்களின் அதிவேக நடவடிக்கை.
சென்னை, மே 26: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பவர் ஹவுஸ் பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவர் பிளம்பர் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மகனின் பள்ளி கட்டணத்திற்காக வைத்திருந்த ரூ.31,200/- பணத்தை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், உடனடியாக ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் ஆலோசனையின் பேரில் காவலர் இருளப்பன் சம்பவம் நடந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா
அறக்கட்டளைக்கு அறக்கட்டளை உதவி.
சென்னை வண்ணாரப்பேட்டையில் இயங்கி வரும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூக அன்னை ஸ்ரீ காமாட்சி கல்வி அறக்கட்டளை, கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்கி வருகிறது. இந்த நிலையில், தெய்வத்திரு மனோகரா பூபதி அறக்கட்டளை சார்பில் அன்னை ஸ்ரீ காமாட்சி கல்வி அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த தொகையை மனோகரா பூபதி அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான ஹரி
ஜப்பான் 100 மோன் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு.
திருச்சி, ஏப். 5– திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஜப்பான் 100 மோன் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கி பேசுகையில், நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் போன்ற பரிமாற்ற ஊடகங்களை சேகரித்தல், அவற்றை ஆய்வு செய்தல் மற்றும் வரலாற்று பின்னணியை ஆராய்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றார். மேலும், நாணயங்களின் உற்பத்தி
வாகன விபத்தில் மூளைச்சாவு – 42 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்.
தென்காசி, ஏப்.4: தென்காசி மாவட்டம் குலையனேரியைச் சேர்ந்த சீதையம்மாள் (42) வாகன விபத்தில் பலத்த காயமடைந்தார். விபத்துக்குப் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களின் முயற்சிகள் பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சீதையம்மாளின் குடும்பத்தினர் மனிதநேய உணர்வுடன் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புதல் அளித்தனர். மருத்துவ குழுவினர் சட்ட விதிமுறைகளின்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவரது உடல் உறுப்புகள் தேவையுள்ள நோயாளிகளுக்கு மாற்று

