அமைச்சர் கீர்த்தனா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ்க்கு சென்னை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்டதாக சென்னை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மாரிதாஸ் பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ரூ.10,000
Category: அரசியல்
டிஜிட்டல் முறையில் ஆதரவு திரட்ட புதிய வெப்சைட் தொடக்கம்: “என் கட்சியில் இணையுங்கள்” என அழைப்பு!
சென்னை, ஜூன். 5 – தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வாக, புதிய அரசியல் இயக்கத்தை அறிவித்த கையோடு, டிஜிட்டல் முறையில் தமக்கான ஆதரவைத் திரட்டும் அதிரடிப் பணிகளில் அண்ணாமலை களமிறங்கியுள்ளார். இதற்காக பிரத்யேக இணையதளம் ஒன்றும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் புதிய பாதையில் பயணிக்கப் போவதாக அண்மையில் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த புதிய அரசியல் இயக்கத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில், தற்போது தொழில்நுட்பப் புரட்சியை அவர்
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.
பா.ஜ.க.,வில் இருந்து விலகும் K. Annamalai-ன் முடிவை தேசிய தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. பா.ஜ.க., Bharatiya Janata Party அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், அவரது ராஜினாமா முடிவுக்கு தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகுவது உறுதியாகியுள்ளது.
கலைஞர் 103-வது பிறந்தநாள் விழா: ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து.
திருவொற்றியூர்: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவொற்றியூரில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவொற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் மற்றும் முன்னாள் மாநகராட்சி 5-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.பி. சொக்கலிங்கம் ஆகியோர், தி.மு.க. நிர்வாகிகளுடன் இணைந்து கே.வி.கே. குப்பம், விம்கோ நகர் மற்றும் சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கலைஞரின் திருஉருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை
ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம், மார்ச் 26 விடியா திமுக அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் வருவாய் மாவட்ட தலைநகரான பாரதி நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அஇஅதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.
பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர் கான் தலைமையிலும், தமுமுக மாவட்ட செயலாளர் ஆசிக் சுல்தான் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய கவுன்சிலர்
தமிழக வெற்றி கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திமுக அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகம் தலைவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையிலும், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பாபு லத்தீப் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சாதி வெறி ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும், மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருட்கள் பரவலை
முதல்வரை சந்திக்க அனுமதி கோரி எம்.எல்.ஏ.க்கு மனு
ராமநாதபுரம்: தமிழ்நாடு பட்டங்கட்டி கடையர் பேரவை சார்பாக, சமுதாயத்தினர் சாதி சான்றிதழ் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை தீர்க்க தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த தமிழ்நாடு பட்டங்கட்டி கடையர் பேரவை சார்பாக, கிராமத் தலைவர் மற்றும் நிர்வாகத்தினர், சமுதாய நிர்வாகிகள் மற்றும் பெரியோர்கள் இணைந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக
12 புதிய சிஎன்ஜி பேருந்துகள் துவக்கம்.
ராமேஸ்வரம், மார்ச் 4: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் காரைக்குடி மண்டலம் சார்பில், ராமேஸ்வரம் நகராட்சியில் 12 புதிய அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) பேருந்துகள் இன்று சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டன. “தூய்மை ராமேஸ்வரம்” என்ற நோக்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி அறிமுகப்படுத்தப்பட்ட இப்புதிய பேருந்து சேவையை, சிவசங்கர், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர், கொடி அசைத்து மற்றும் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து
தமிழக அரசியலின் ஒளிக்கோப்பு தோழர் இரா. நல்லகண்ணு மறைவு
சென்னை, பிப்ரவரி 23: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான R. Nallakannu (101) இன்று மதியம் 1.55 மணியளவில் சென்னை Rajiv Gandhi Government General Hospital மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், பின்னர் மூச்சுத் திணறல்

