ஆயுள் கைதிகள் முன்விடுதலை: விரைந்து பரிசீலிக்க கோரிக்கை.

சென்னை:தமிழ்நாட்டில் நன்னடத்தை, குறிப்பிட்ட கால சிறைவாசம், வயது மற்றும் உடல்நிலை உள்ளிட்ட தகுதிகளை நிறைவு செய்தும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஆயுள் கைதிகளின் முன்கூட்டிய விடுதலை மனுக்களை புதிய அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிறை நிர்வாகத்தின் பரிந்துரை இருந்தும் பல மனுக்கள் மீது முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், கைதிகளின் குடும்பத்தினர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். எனவே, “அனைவருக்குமான ஆட்சி” என்ற நோக்கத்துடன்

Read More

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நியாயமாக நடைபெறுகிறது, உயர்நீதிமன்றம் கருத்து.

சென்னை: அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நியாயமாக நடைபெறுவதாகவே தெரிகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதி முகமது சபீக் கருத்து தெரிவித்துள்ளார். அரசு வழக்கறிஞர் தற்காலிக நியமனங்களில் திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பரிசீலிக்கப்படுவதாக மனுதாரரே தெரிவித்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக தவெக நிர்வாகிகள் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முதலமைச்சர் விஜய்

Read More

மேல்முறையீடு நிலுவையில் இருந்தால் பரோல் உண்டா?

குற்ற வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது தொடர்பாக நீதித்துறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு வெவ்வேறு அமர்வுகள் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியதால், சட்டப்பூர்வமான தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீடு நிலுவையில் உள்ள கைதிகளுக்கு பரோல் வழங்கும் அதிகாரம்

Read More

அமைச்சர் குறித்து அவதூறு வழக்கு – யூடியூபர் மாரிதாஸுக்கு நிபந்தனை ஜாமீன்.

அமைச்சர் கீர்த்தனா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ்க்கு சென்னை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்டதாக சென்னை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மாரிதாஸ் பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ரூ.10,000

Read More

டிஜிட்டல் முறையில் ஆதரவு திரட்ட புதிய வெப்சைட் தொடக்கம்: “என் கட்சியில் இணையுங்கள்” என அழைப்பு!

சென்னை, ஜூன். 5 – தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வாக, புதிய அரசியல் இயக்கத்தை அறிவித்த கையோடு, டிஜிட்டல் முறையில் தமக்கான ஆதரவைத் திரட்டும் அதிரடிப் பணிகளில் அண்ணாமலை களமிறங்கியுள்ளார். இதற்காக பிரத்யேக இணையதளம் ஒன்றும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் புதிய பாதையில் பயணிக்கப் போவதாக அண்மையில் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த புதிய அரசியல் இயக்கத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில், தற்போது தொழில்நுட்பப் புரட்சியை அவர்

Read More

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.

பா.ஜ.க.,வில் இருந்து விலகும் K. Annamalai-ன் முடிவை தேசிய தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. பா.ஜ.க., Bharatiya Janata Party அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், அவரது ராஜினாமா முடிவுக்கு தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகுவது உறுதியாகியுள்ளது.

Read More

கலைஞர் 103-வது பிறந்தநாள் விழா: ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து.

திருவொற்றியூர்: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவொற்றியூரில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவொற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் மற்றும் முன்னாள் மாநகராட்சி 5-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.பி. சொக்கலிங்கம் ஆகியோர், தி.மு.க. நிர்வாகிகளுடன் இணைந்து கே.வி.கே. குப்பம், விம்கோ நகர் மற்றும் சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கலைஞரின் திருஉருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை

Read More

ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.     ராமநாதபுரம், மார்ச் 26 விடியா திமுக அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் வருவாய் மாவட்ட தலைநகரான பாரதி நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அஇஅதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.

Read More

பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர் கான் தலைமையிலும், தமுமுக மாவட்ட செயலாளர் ஆசிக் சுல்தான் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய கவுன்சிலர்

Read More

தமிழக வெற்றி கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திமுக அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகம் தலைவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையிலும், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பாபு லத்தீப் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சாதி வெறி ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும், மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருட்கள் பரவலை

Read More

Facebook