கோவை: வெள்ளக்கிணறு பகுதியில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை விசாரணை என்ற பெயரில் தனியாக அழைத்துச் சென்ற காவலர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண், அழுதபடியே தனது நண்பரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதையடுத்து உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவலர் வினோத் குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
Author: vnewstamil
கணவன் கண்முன்னே தாய், 6 மாத மகள் பலி மாதவரம் ரவுண்டானா அருகே கண்டெய்னர் லாரி மோதி பரிதாபம்
சென்னை, ஜூலை 18: சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே இன்று நிகழ்ந்த கோர சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும், 6 மாத பெண் குழந்தையும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நித்தியானந்தம் (36), அவரது மனைவி ஷர்மிளா (28) மற்றும் 6 மாத மகள் பிரதிக்ஷாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி பைக்
அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நியாயமாக நடைபெறுகிறது, உயர்நீதிமன்றம் கருத்து.
சென்னை: அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நியாயமாக நடைபெறுவதாகவே தெரிகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதி முகமது சபீக் கருத்து தெரிவித்துள்ளார். அரசு வழக்கறிஞர் தற்காலிக நியமனங்களில் திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பரிசீலிக்கப்படுவதாக மனுதாரரே தெரிவித்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக தவெக நிர்வாகிகள் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முதலமைச்சர் விஜய்
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன் கொலை. கோயிலுக்கு அழைத்துச் சென்று தீர்த்துக்கட்டிய மனைவி; காதலனுடன் தப்பிய இருவரும் கைது.
கிருஷ்ணகிரி: திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்ததாகக் கூறி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று கணவனை மனைவி மற்றும் அவரது காதலன் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில், யாசினி (20) கோயிலுக்கு செல்லும் வழியிலேயே தனது காதலன் யுகேந்தர் (20)-க்கு லைவ் லொகேஷன் அனுப்பி வரவழைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சேர்ந்து கணவனை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு,
ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை: காத்திருப்போரின் கண்ணீருக்கு அரசு கருணை காட்டுமா?
சிறப்புக் கட்டுரை ஒரு குற்றத்திற்காக வழங்கப்படும் தண்டனை, அந்த நபரின் வாழ்நாள் முழுவதையும் நம்பிக்கையின்றி முடக்கிவிடக் கூடாது என்பதே இந்திய நீதித்துறையின் அடிப்படை மனிதநேயக் கொள்கையாகும். தண்டனையின் நோக்கம் பழிவாங்குவது அல்ல; குற்றவாளியைத் திருத்தி, மீண்டும் சமூகத்தில் நல்ல குடிமகனாக வாழ வழிவகை செய்வதுதான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 72 மற்றும் 161, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவுகள் 432, 433, 433A ஆகியவை, குறிப்பிட்ட நிபந்தனைகளின்
சிறைக் காவலர்கள் 3 பேர் கைது: கைதி மரண வழக்கில் அதிரடி நடவடிக்கை
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த கைதி சபரிவர்மன் மரணம் தொடர்பாக சிறை வார்டன் உட்பட மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில், அவரது உடலில் மொத்தம் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைகள், கால்கள் மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயங்கள் இருந்ததோடு, வலது கையில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உடற்கூறாய்வு அறிக்கையைத் தொடர்ந்து,
திமுக நிர்வாகி மீது கொலை முயற்சி: 3 பேர் கைது
சென்னை: தண்டையார்பேட்டை பகுதியில் திமுக நிர்வாகி ராஜா (45) மீது வீட்டு வாசலிலேயே அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜா உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (44), ரஞ்சித் (33),
உயிர்தப்பிய இளம் பெண் – மாஞ்சா நூலால்.
திருவொற்றியூரில் பரபரப்பு சென்னை: திருவொற்றியூரில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்ற இளம் பெண்ணின் முகத்தில் திடீரென குறுக்கே வந்த மாஞ்சா நூல் மூக்குப் பகுதியில் அறுத்து காயம் ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வலியால் அவதிப்பட்டாலும், தலைக்கவசம் அணிந்திருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். தமிழகத்தில் மாஞ்சா நூல் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை அமலில் இருந்தாலும், சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் மாஞ்சா நூலால் அடிக்கடி விபத்துகள்
பட்டப்பகலில் வீட்டின் பின்கதவை உடைத்து 5 சவரன் நகை கொள்ளை; வாலிபர் கைது.
சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள ஒரு வீட்டில், கடந்த 29-ஆம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பூஜை அறையில் இருந்த 5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு
ரூ.20 கோடி மோசடி: இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது
சென்னையில் குறைந்த விலையில் தங்கக்காசுகள் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் இருந்து சுமார் ரூ.20 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) ஷீலா மேரியை போலீசார் கைது செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்கக்காசுகள் கிடைக்கச் செய்வதாக நம்பிக்கை அளித்து, பல்வேறு நபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு

