சென்னை: அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நியாயமாக நடைபெறுவதாகவே தெரிகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதி முகமது சபீக் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசு வழக்கறிஞர் தற்காலிக நியமனங்களில் திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பரிசீலிக்கப்படுவதாக மனுதாரரே தெரிவித்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக தவெக நிர்வாகிகள் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பெயர்களை நீக்கி உத்தரவிட்டார். மேலும், அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நியாயமான முறையில் நடைபெறுவதாகவே தெரிகிறது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

