சென்னை, ஜூலை 6: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 38-வது வார்டு பகுதிகளான வினோபா நகர், ராஜசேகர் நகர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஈ தொல்லை அதிகரித்து பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையின் மலேரியா பிரிவு ஊழியர்கள் அப்பகுதிகளில் தீவிர சுகாதாரப் பணியில் ஈடுபட்டு, ஈக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஈ மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையால் ஈ தொல்லை குறைந்து, நோய் பரவலைத் தடுக்கவும்
Author: vnewstamil
கணவருக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கூலிப்படையால் கொலை; மனைவி, காதலன் கைது.
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில், கணவரின் உணவில் தூக்க மாத்திரை கலந்து மயக்கமடையச் செய்த மனைவி, காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை வாழ்ந்த அப்பலநாயுடு, மனைவி ஹேமாவின் திருமணத்திற்குப் புறம்பான உறவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஹேமாவும் அவரது காதலன் கங்காதரும் இணைந்து கொலைத் திட்டம் தீட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தூக்கத்தில் இருந்த அப்பலநாயுடுவை கூலிப்படையினர் கழுத்தை
புழல் சிறையில் ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய சதி!
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை சதிக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ரவுடி லாலி மணிகண்டன் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவருடன் தொடர்புடைய மேலும் 3 பேரும் சதியில் தொடர்புடையவர்கள் என தெரியவந்த நிலையில், அவர்கள் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளை சார்பில். மாணவ மாணவிகளுக்கு உதவிகள்.
சென்னை: ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளை சார்பில், சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பவானர் பள்ளியில் (LKG முதல் 5-ம் வகுப்பு வரை) பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தலா 2 செட் புதிய பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் கம்பீர்ஜி சோர்டியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிர்வாக அறங்காவலர் மனீஷ் குமார் சவுத்ரி, செயலாளர் சுரேந்திர கோத்தாரி, NSU தலைவர் தர்ஷன் கோத்தாரி மற்றும் உறுப்பினர்கள்
வீடு புகுந்து இளைஞர் வெட்டிக் கொலை: 8 பேர் கைது.
சென்னை நொளம்பூர் பகுதியில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையாக மாறியது. 8 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சஞ்சய் (25) என்ற இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இந்த தாக்குதலில் சஞ்சயின் தந்தை முருகதாஸ் மற்றும் சகோதரர் சரத் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை வழக்கில் தப்பியோட முயன்றதாகக் கூறப்படும் ரூபேஷை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மேலும்,
போதைக்கு பணம் தர மருத்த, தாய்மாமனை அடித்துக் கொலை.
சென்னை வியாசர்பாடி ஏரிக்கரை ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் மது அருந்த பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் தாய் மாமனை தாக்கி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறுகையில், அப்பகுதியில் வசித்து வந்த முருகன் (50) என்பவரிடம் அவரது உறவினரான பவித்ரன் (30) மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த
ரூ.2 கோடி காப்பீட்டு பணத்திற்காக கணவருக்கு விஷ ஊசி: மனைவி, கள்ளக்காதலன் கைது.
திருப்பதி, ஜூன் 16: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சந்தீப் (46) தனது பெயரில் ரூ.2 கோடி காப்பீடு எடுத்திருந்தார். கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், காப்பீட்டு தொகையை கைப்பற்றும் நோக்கில் அவரது மனைவி சுமா மற்றும் அவரது கள்ளக்காதலன் புண்டலிகா டோம் பர் ஆகியோர் இணைந்து திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி,
பட்டா கத்தியுடன் இளைஞர் மிரட்டல்!
சென்னை பெரம்பூர் பகுதியில் ஸ்கூட்டரில் அதிவேகமாக வந்த இளைஞர், தனது இருசக்கர வாகனத்தில் மோதியதை தட்டிக் கேட்ட முதியவரை பட்டா கத்தியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதல் குறித்து முதியவர் கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த இளைஞர், இடுப்பில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அச்சமடைந்த முதியவர் உடனடியாக வீட்டிற்குள் சென்றார். ஆனால் அதன்பிறகும் இளைஞர் அங்கிருந்து செல்லாமல், தொடர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
போலீஸ் ஏட்டு மீது நடவடிக்கை. ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறல்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு முருகன் (45) கள் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். போலீஸ் துறையின் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஆபாச பேச்சு: தலைமை காவலர் பணியிடை நீக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் அக்னிமுத்து, குடும்பப் பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி, குறுஞ்செய்திகள் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மனுவில் இருந்த செல்போன் எண்ணை பயன்படுத்தி அந்த பெண்ணை தொடர்புகொண்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பான ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்

