மேல்முறையீடு நிலுவையில் இருந்தால் பரோல் உண்டா?

மேல்முறையீடு நிலுவையில் இருந்தால் பரோல் உண்டா?

குற்ற வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது தொடர்பாக நீதித்துறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு வெவ்வேறு அமர்வுகள் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியதால், சட்டப்பூர்வமான தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல்முறையீடு நிலுவையில் உள்ள கைதிகளுக்கு பரோல் வழங்கும் அதிகாரம் மற்றும் நடைமுறைகள் குறித்து இந்த அமர்வு விரிவாக ஆராய்ந்து இறுதி முடிவை வழங்க உள்ளது. இந்த தீர்ப்பு, எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளுக்கான முக்கிய வழிகாட்டுதலாக அமையும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook