சென்னை, ஜூலை 22:
பெருந்தலைவர் காமராஜர் குறித்து தரக்குறைவாக பேசியதாக குற்றம் சாட்டப்படும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த எம்.எஸ். அருணாசலம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு நாடார் சங்கங்கள் சார்பில் இன்று (22.07.2026) சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்படுகிறது.
இந்த புகார் மனுவை மின்னல் ஸ்டீபன் நாடார், முத்துரமேஷ் நாடார், சாமுவேல் திரவியம் நாடார், விஜயசந்திரன் நாடார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பல நாடார் சங்க பிரதிநிதிகள் இணைந்து வழங்குகின்றனர்.
காமராஜர் மீது மரியாதை கொண்ட பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

