சென்னை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம். எம். கோபி அவர்களுக்கு, வடசென்னை பொது வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, மேலும் பல உயரங்களை அடைய வேண்டும் என சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இதையொட்டி, வடசென்னை பொது வியாபாரிகள் நலச் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் அ. வினோபாஜி, எம். எம். கோபியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், சங்கத்தின் தலைவர் பால குருசாமி, பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

