சென்னையைச் சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, நார்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற Norway Chess 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். இந்த தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இதையடுத்து C. Joseph Vijay தனது வாழ்த்துச் செய்தியில், “நார்வே செஸ் 2026 தொடரில் வெற்றி பெற்று முதல் இந்தியராக சாதனை படைத்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். உலகின் நம்பர்-1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இருமுறை வீழ்த்தி தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவர் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

