சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் திருமலை, மனிதநேய செயலில் அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். ஆர்.கே. நகர் பகுதியில் வசித்து வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் கல்வி பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர் பள்ளிக்குச் செல்ல தேவையான பள்ளி பை (School Bag) ஒன்றை வழங்கியுள்ளார். குடும்பத்தின் நிலையை உணர்ந்து தாமாக முன்வந்து உதவிய உதவி ஆய்வாளர் திருமலை,
Category: ட்ரெண்டிங்
டிஜிட்டல் முறையில் ஆதரவு திரட்ட புதிய வெப்சைட் தொடக்கம்: “என் கட்சியில் இணையுங்கள்” என அழைப்பு!
சென்னை, ஜூன். 5 – தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வாக, புதிய அரசியல் இயக்கத்தை அறிவித்த கையோடு, டிஜிட்டல் முறையில் தமக்கான ஆதரவைத் திரட்டும் அதிரடிப் பணிகளில் அண்ணாமலை களமிறங்கியுள்ளார். இதற்காக பிரத்யேக இணையதளம் ஒன்றும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் புதிய பாதையில் பயணிக்கப் போவதாக அண்மையில் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த புதிய அரசியல் இயக்கத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில், தற்போது தொழில்நுட்பப் புரட்சியை அவர்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தலைமைக் காவலர் போக்சோவில் கைது
சென்னை, மே 28: சென்னை கோடம்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 11 வயது சிறுவனுக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை அளித்ததாக வடபழனி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோடம்பாக்கம் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 11 வயது சிறுவனிடம், மதுபோதையில் இருந்த தலைமைக் காவலர் தவறான முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
“ஆரோக்கிய சமூகத்திற்கு சமூக அமைப்புகள் அவசியம்”
சென்னை, மே 12: சென்னை அனுவ்ரத் சமிதி சார்பில் “ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் சமூக அமைப்புகளின் பங்கு” என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி புரசைவாக்கத்தில் உள்ள C.U. ஷா பவனில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக அனுவ்ரத் கீதம் பாடப்பட்டது. பின்னர் சமிதியின் தலைவர் திருமதி சுபத்ரா லுனாவத் வரவேற்புரை வழங்கி, விருந்தினர்களை கௌரவித்தார். நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட JITO சென்னை தலைவர்
தாயின் கண் முன்னே மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் – முன்னாள் அமைச்சரின் மகன் கைது; சில மணி நேரத்தில் ஜாமீன்
உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. தாயின் கண் முன்னிலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் வழக்கில், பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் ஆர்யமான் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததாக
புழல் சிறையில் போதை மாத்திரைகள் பறிமுதல்: பாதுகாப்பு குறித்து கேள்வி எழும் நிலை.
சென்னை: புழல் மத்திய சிறையில் பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசாரணை கைதிகள் தங்கியிருந்த அறையில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைதான வில்லிவாக்கத்தை சேர்ந்த ரவுடி செல்வம் (32) மற்றும் அரும்பாக்கம் ரவுடி கணேஷ் (38) ஆகியோரின் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, அவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹரி பிரபுவுக்கு ‘ரத்தன் டாடா தொலைநோக்குச் சின்னம் விருது’ வழங்கப்பட்டது
சென்னை: சமூக சேவைக்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டு வரும் ஹரி பிரபு அவர்களுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான ‘ரத்தன் டாடா தொலைநோக்குச் சின்னம் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மனோகரா பூபதி அறக்கட்டளை மூலம் இலவச உணவு மற்றும் கல்வி வழங்கி வரும் இவரது சேவையைப் பாராட்டி, ஜீவ்ரான் அறக்கட்டளை இந்த உயரிய விருதை வழங்கிக் கௌரவித்துள்ளது. “முதலில் தட்டை நிரப்புவோம், பிறகு புத்தகத்தைத் திறப்போம்” என்ற நோக்கத்தில் இவர் ஆற்றி
வாக்கு விற்காதீர் – ஜனநாயகத்தை காப்போம்! பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம் என மக்கள் சக்தி இயக்கம் விழிப்புணர்வு.
புதுக்கோட்டை, ஏப்.4: ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை பணம் மற்றும் பொருளுக்காக விற்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் புதுக்கோட்டை மூன்றாவது தெரு பேருந்து நிறுத்தம் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை உணர்ந்து நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. “எனது வாக்கு எனது உரிமை”, “என் வாக்கு விற்பனைக்கு இல்லை”,
பொதுமக்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 23-ந்தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அதிரடி உத்தரவு.
பொதுமக்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 23-ந்தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அதிரடி உத்தரவு. சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசு மிக முக்கியமான அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23-ந்தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது. அன்று காலை 7:00 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6:00
திருமணமான ஆண் – ‘லிவ்-இன்’ உறவு குற்றமல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
திருமணமான ஆண் – ‘லிவ்-இன்’ உறவு குற்றமல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அலகாபாத், மார்ச் 29: திருமணமான ஒரு ஆண், தனது மனைவியைத் தவிர மற்றொரு வயது வந்த பெண்ணுடன், இருவரின் சம்மதத்துடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழ்ந்தால், அது குற்றமாக கருதப்படாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. ⚖️ இந்த வழக்கில், வயது வந்த ஆண் மற்றும் பெண் இருவரும் தங்களின் விருப்பப்படி இணைந்து

