கிருஷ்ணகிரி: திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்ததாகக் கூறி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று கணவனை மனைவி மற்றும் அவரது காதலன் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் விசாரணையில், யாசினி (20) கோயிலுக்கு செல்லும் வழியிலேயே தனது காதலன் யுகேந்தர் (20)-க்கு லைவ் லொகேஷன் அனுப்பி வரவழைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சேர்ந்து கணவனை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துக்குப் பிறகு, ஒன்றரை வயது குழந்தையை தூக்கிக்கொண்டு காதலனுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற யாசினியை, யுகேந்தருடன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

