சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த ஷிப்பிங் இண்டஸ்ட்ரி தொழிலதிபர் தெய்வத்திரு டாக்டர் கே.பி. பிரேம் ஆனந்த் கடந்த 20-09-2024 அன்று காலமானார். அவரது மறைவு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அவரது 2-ம் ஆண்டு நினைவு நாள் நாளை (20-09-2026) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது குடும்பத்தினர் அனைவரும் குடும்பத்துடன் இணைந்து, மறைந்த டாக்டர் கே.பி. பிரேம் ஆனந்தின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். அவரது மகன் பி.பி.வல்ல முருகன், மருமகள் G.காயத்ரி மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று, அவரது நினைவுகளை போற்ற உள்ளனர்.

