ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி சித்தர் மலர்களால் ஆசி வழங்கினார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம். வள்ளிமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக பதவியேற்கும் எங்கள் ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி ஆலய அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் A.V.சாரதி அவருக்கு ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி சித்தர் மலர்களால் ஆசி வழங்கினார். மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் 9150223444

Read More

T.H.ரோடு நடைபாதை வியாபாரிகளுக்கு.

பெருநகர சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு.   சென்னை வண்ணாரப்பேட்டை. T.H.ROAD பிரதான சாலையில்  நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு முக்கிய அறிவிப்பை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வரும் 17.03.2025 அன்று மாநகராட்சி நடைபாதையில் மண்டலம் 04. பகுதி 10, கோட்டம் 42க்கு உட்பட்ட T.H.ROAD உள்ள கடைகள் அனைத்தையும் அகற்ற போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை தவிர்க்க வியாபாரிகள் தாங்களாகவே நடைபாதை ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்துமாறு

Read More

தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி,விவசாயம் செய்ய வழி பாதை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை, தளவாய் பட்டடை கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் முற்றிய நெற்கதிர்கள் அறுவடை செய்ய வழியின்றி டிராக்டர், அறுவடை இயந்திர வாகனங்கள் சென்று வர வழி பாதை கேட்டு. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர் நாட்டாண்மை, கிளைத்தலைவர் ஆ. மணி தலைமையில் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், கொடைக்கல் ஊராட்சி, தளவாய்பட்டடை கிராமம் சர்வே எண் 1360-ல் ஏறி வரத்து

Read More

அஞ்சல் தலை சேகரிப்பாளருக்கு பாராட்டு!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் மாநில அளவிலான அஞ்சல் தலை கண்காட்சியில் வெற்றி பெற்ற அஞ்சல் தலை சேகரிப்பாளருக்கு பாராட்டு விழாவினை திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். விழாவில், தமிழ்நாடு அஞ்சல் வட்டம் தென்னிந்திய தபால் தலை சேகரிப்பாளர்கள் சங்கத்துடன் (SIPA) இணைந்து சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நடத்திய

Read More

10 ஆண்டு கோரிக்கை. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு செங்குந்தர் புதிய ஒத்தவாடை தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பத்தாண்டுக்கு மேலாக கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது நகராட்சி நிர்வாகம் கோரிக்கையை ஏற்று பொது நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் மீது குடியிருப்பு வாசிகள் படிக்கட்டுகள் சாய்வு தளம் அமைத்து ஆக்ரமிப்பு செய்துள்ளனர்.

Read More

பேருந்து நிறுத்த நிழல் குடை. மக்கள் உயிரை பறிக்கும் அபாய நிலையில். ராணிப்பேட்டை மாவட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வன்னிய மோட்டூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ள நிழல் குடை 30 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. தற்போது நிழற்குடை பக்கவாட்டு சுவர் இடிந்தும் மேற்கூரை சீதலமைந்து கம்பிகள் துருப்பிடித்து சேதமான நிலையில் காணப்படுகிறது. எப்போழுது வேண்டுமானாலும் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலையில் உள்ளது.5-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பேருந்து பயணத்திற்கு நிழற்குடை பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம்

Read More

தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். வார சந்தைக்கு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் சமத்துவபுரத்திலிருந்து கூடலூர் வரை சோளிங்கர் அரக்கோணம் பிரதான நெடுஞ்சாலையின் இருபுறமும் 500 க்கும் மேற்பட்ட காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய கடைகள் வைத்து புதன் கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க 25 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருளை வாங்கி செல்கிறார். பொருட்கள் வாங்குபவர்கள் நெடுஞ்சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு கூட்டம் கூட்டமாக

Read More

குழந்தைகளுடன் தாய் தற்கொலை? கணவர் மாயம்.

தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சம் இழப்பு: குழந்தைகளுடன் தாய் தற்கொலை? கணவர் மாயம்.   நாமக்கல்லில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சத்தை கணவர் இழந்த விரக்தியில் தனது இரு குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது கணவர் மாயமானதால் சந்தேக அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் பிரேம்ராஜ் (38).

Read More

இரண்டு நாட்கள். தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

வருகின்ற 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மையத்திற்கு வருகை தர இருப்பதால் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதையும் ட்ரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial

Read More

Facebook