ரூ.8 லட்சம் கடன் வாங்கிய வாலிபர் – திருப்பிச் செலுத்தாமல் பொய் புகார்:

சென்னை, செப்.1– சென்னை திருமங்கலம் ஜமீன்தார் தெருவை சேர்ந்த ரமேஷ் சந்த், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் தொடர்பான பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பெரம்பூர், தீட்டி தோட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (32), தனது மோட்டார் சைக்கிளின் ஆர்.சி. புத்தகத்தை அடமானம் வைத்து ரமேஷ் சந்திடம் ரூ.8 லட்சம் கடன் பெற்றார். பின்னர், அந்த ஆர்.சி. புத்தகம் தொலைந்துவிட்டதாகக் கூறி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் புகார் அளித்து டூப்ளிகேட் ஆர்.சி. புத்தகத்தை பெற்றார்.

Read More

முதலாம் ஆண்டு மாணவர் தாக்குதல் – 6 மூத்த மாணவர்கள் மீது வழக்கு

ஜார்கண்டில் ராகிங்: முதலாம் ஆண்டு மாணவர் தாக்குதல் – 6 மூத்த மாணவர்கள் மீது வழக்கு   ராஞ்சி, செப்.1 – ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் முருபண்டா கிராமத்தில் செயல்பட்டு வரும் ராம்கர் இன்ஜினீயரிங் கல்லூரியில் ராகிங் சம்பவம் இடம்பெற்றது. கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவரை, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக

Read More

எண்ணூரில் சாக்கடை பிரச்னை – மக்கள் வேதனை. கண்டுகொள்ளாத அதிகாரிகள்.

எண்ணூர் ராமகிருஷ்ணா நாலாவது தெரு பகுதியில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி கொண்டே வருகிறது. இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. கழிவுநீர் சாலையில் வழிந்து தேங்குவதால் அப்பகுதியில் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நிலவி வரும் சுகாதார அசௌகரியத்தை உடனடியாக தீர்க்க மாநகராட்சி உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த

Read More

பரங்கிமலையில் போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை

ஆலந்தூர், ஆக.31 – சென்னையை அடுத்த பரங்கிமலை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் மத்திய குற்றப்பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்த சந்திரமோகன் (46) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திரமோகனுக்கு மனைவி ஜெனிபர் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த வாரம் மனைவி, மகள்களுடன் சொந்த ஊரான கேரளா சென்றிருந்தனர். இதையடுத்து, முன்னொரு நாள் இரவு ஜெனிபர் கணவருக்கு பலமுறை தொலைபேசி செய்தும் பதில் வராததால்

Read More

பெரம்பூரில் என்ஜினீயரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

சென்னை, ஆக.31– பெரம்பூர் வடிவேல் தெருவில், சென்னை மாநகராட்சியின் சார்பில் தனியார் நிறுவனம் மூலம் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் அண்ணாநகரை சேர்ந்த ராமன் (26) எனும் இளைஞர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த இரவு, கட்டுமானப் பொருட்களை காக்கும் போது மர்ம நபர்கள் இருவர், அங்கிருந்த இரும்புக் கம்பிகளை திருட முயன்றுள்ளனர். அதை தடுத்த ராமனை, கத்தி காட்டி மிரட்டி, அவரிடம்

Read More

மருத்துவர் 7 பெண் நோயாளிகளை மயக்கமருந்து கொடுத்து பலாத்காரம் செய்த வழக்கு: 24 ஆண்டு சிறை தண்டனை

வாஷிங்டன், ஆக.31– அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர் ஜி.ஆலன் செங் மீது 7 பெண் நோயாளிகளை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு ஒரு பெண் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க அவரது வீட்டுக்கு சென்றிருந்த ஆலன், சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது. சம்பவம் குறித்து அந்த பெண் தனது வீட்டு கண்காணிப்பு கேமரா

Read More

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

சென்னை, ஆக.30– சென்னை ராயபுரம் பகுதியில், கட்டிட தொழிலாளி ஒருவர் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை சோமுசெட்டி 1-வது தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (39) கட்டிட தொழிலாளி ஆவார். நேற்று முன்தினம் இரவு மது அருந்திய நிலையில், கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்தின் 3-வது மாடி மொட்டைமாடியில் தனியாக தூங்கச் சென்றார். அப்போது தவறி கீழே விழுந்த

Read More

ஓட்டேரியில் உறவினரின் வாகனத்தை எரித்த வாலிபர் கைது

சென்னை, ஆக.30– சென்னை ஓட்டேரி பகுதியில், வீட்டை எழுதி தருமாறு உறவினரிடம் கோரிய வாலிபர், தகராறு காரணமாக அவரது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் வசந்தகுமார் (45), கார் டிரைவர். இவரது வீட்டின் மேல் தளத்தில் உறவினரான விக்னேஷ் (25) வசித்து வருகிறார். நேற்று அதிகாலை, மாடி பகுதியில் உள்ள வீட்டை தமக்கே எழுதி தருமாறு விக்னேஷ், வசந்தகுமாரிடம் கோரியுள்ளார். இதனை

Read More

இறுதி அறிக்கையை கண்காணிக்க தவறியதாக குற்றச்சாட்டு: 5 போலீஸ் சூப்பிரண்டுகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தடை.

சென்னை, ஆகஸ்ட் 30: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தவறிய விவகாரம் தொடர்பாக, 5 போலீஸ் சூப்பிரண்டுகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு முடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தாலும், அதற்கான இறுதி அறிக்கை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாதது விசாரணையின்

Read More

காவல்துறையினர் கடைகளை மூடச் சொல்வதாக.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சென்னை: தமிழக அரசின் உத்தரவின்படி 24 மணி நேரமும் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை இரவு நேரங்களில் கடைகளை மூடுமாறு மிரட்டுவதாக தேசிய ஓட்டல்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணையை மீறி கடைகள் மூடப்படக் கூடாது என்று தெளிவுபடுத்தியது. மேலும், அனைத்து காவல் நிலையங்களுக்கும் அரசாணை தொடர்பான தகவலை உடனடியாக அறிவிக்க சென்னை

Read More

Facebook