பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதி ஒருவர் ஆப்பிள் மாலை அணிந்தபடி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. சீனிவாஸ் எனப்படும் “குப்பாச்சி சீனா” என்ற கைதி சிறையில் மொபைல் போனில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை பதிவு செய்து வெளியிட்டிருப்பது, சிறை பாதுகாப்பு முறைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. சிறைகளில் மொபைல் போன்கள் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், கைதிகள் இதை எளிதில் பயன்படுத்துவது எவ்வாறு
Category: குற்றம்
பேட்டரி தீர்ந்ததால் திருட்டை பாதியில் கைவிட்ட திருடன்!
சென்னையை அடுத்த திருநின்றவூரில் நள்ளிரவில் நடைபெற்ற சுவாரஸ்யமான திருட்டு முயற்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது. அங்கு உள்ள மகாலட்சுமி ஜுவல்லரி என்ற நகைக்கடையின் ஷட்டரை, அடையாளம் தெரியாத திருடன் ஒருவர் கட்டிங் இயந்திரம் கொண்டு அறுத்துள்ளார். ஒரு மனிதன் நுழையக்கூடிய அளவுக்கு ஷட்டர் வெட்டப்பட்ட நிலையில், அதன் பின்னால் இருந்த கிரில் கேட்யையும் அறுத்து உள்ளே நுழைய முயன்றுள்ளார். அதன் பின்னர் உள்ள கேஷ் கவுண்டர் மற்றும் நகை டிஸ்ப்ளே தடுப்பையும்
துப்புரவுத் தொழிலாளி விஷவாயுவால் பலி – நயினார் நாகேந்திரன் கண்டனம்
கொளத்தூரில் துப்புரவுத் தொழிலாளி விஷவாயுவால் பலி – நயினார் நாகேந்திரன் கண்டனம் சென்னை கொளத்தூரில் கால்வாய் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளி, விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்: “கார் ரேஸ்களுக்கும் விளம்பர நாடகங்களுக்கும் கோடி கோடியாக செலவழிக்கும் திமுக அரசுக்கு, ஏழைத் துப்புரவுத் தொழிலாளியின் உயிரைப் பாதுகாக்க சில ஆயிரம்
கருவின் பாலினத்தை தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு சீல்!
சேலம் எடப்பாடியில் கருவின் பாலினத்தை தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு சீல்! சேலம் மாவட்டம் எடப்பாடியில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கர்ப்பிணிப் பெண் ஒருவரை ஸ்கேன் செய்ய அனுப்பி வைத்த நிலையில், திடீரென உள்ளே நுழைந்த அதிகாரிகள், மருத்துவமனையின் செயல்பாடுகளை சோதனை செய்தனர். இதில், மருத்துவர் கண்ணன், அவரது மனைவி ஜோதி
நாகர்கோவில் சிறையில் கைதிகள் மோதல் – 2 பேர் காயம்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் கைதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பேச்சியப்பன், முத்துராஜ் ஆகிய இருவரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக 13 கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனைக்கு முற்றுகை போராட்டம்!
மதுரை: சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் இறந்து மூன்று நாட்கள் ஆனதை மறைத்து, ‘சிகிச்சை’ என்ற பெயரில் பணம் வசூலித்ததாக மதுரை வேலம்மாள் மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு சாட்டியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த மாணவியின் உறவினர்கள், நண்பர்கள் மருத்துவமனைக்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, மருத்துவமனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
காஷ்மீர் இளைஞர் கைது – பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த குற்றச்சாட்டு
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து தந்ததாக தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் ஆதரவாளர்கள் உதவியிருக்கிறார்களா என்பதை விசாரிக்கும் நிலையில், அந்த இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அவரை கைது செய்தனர். உள்ளூர் நபர்கள் இன்னும் யாரேனும் இதில் தொடர்புடையவர்களா என்பதை கண்டறிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
PUBG அடிமையால் 4 பேரைக் கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டு சிறை!
பாகிஸ்தானில், PUBG விளையாட்டில் தோல்வியால் விரக்தியடைந்த நிலையில், தாய் கண்டித்ததற்குக் கோபமடைந்த சிறுவன் ஜைன், துப்பாக்கியால் தன் தாயையும் 3 சகோதரர்களையும் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம், சிறுவனின் வயதை கருத்தில் கொண்டு மரண தண்டனை விதிக்காமல், 4 ஆயுள் தண்டனைகள் — மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்துள்ளது.
சென்னை போலீசாருக்கு ஆயுள் தண்டனை
சென்னை கோட்டூர்புரத்தில் 2009ஆம் ஆண்டு நடந்த மரண வழக்கில், முன்னாள் எஸ்.ஐ. மற்றும் 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குடிபோதையில் தகராறு செய்த பழனி என்ற நபர் காவல் நிலையம் சென்று வீடு திரும்பியதும் உயிரிழந்தார். இதையடுத்து ஆர்.டி.ஓ. விசாரணையில், போலீசார் தாக்கியதே மரணத்திற்குக் காரணம் என தெரியவந்தது. இதனால் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. அதன்பேரில் அப்போது எஸ்.ஐ.யாக பணியாற்றிய ஆறுமுகம்
அஜித் குமார் கொலை வழக்கு: சாட்சிகள் பாதுகாப்பில்
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் 5 போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சம்பவத்தின் பின்னர் போலீசார் சாட்சிகளின் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள், அலாரம், கதவு பாதுகாப்பு மற்றும் ரகசிய லென்ஸ் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கில் சாட்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

