இறந்தும் உயிர் வாழ்கிறார். மோனிக்ராஜ்.

இறந்தும் உயிர் வாழ்கிறார். மோனிக்ராஜ்.

கோவை: சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த 24 வயதுடைய இளைஞர் மோனிக் ராஜ் அவர்களின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக வழங்கி மனிதநேயத்தின் உயர்ந்த எடுத்துக்காட்டை உருவாக்கியுள்ளனர்.

விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த மோனிக் ராஜ் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் மனிதாபிமான மனப்பான்மையுடன் இதயம், சிறுநீரகங்கள் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை தானமாக அளிக்க சம்மதித்தனர்.

அவரது உடல் உறுப்புகள் பல நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளதால், பலருக்கு புதிய வாழ்க்கை கிடைக்க உள்ளது. இளைஞரின் இந்த தியாகமும், பெற்றோரின் உயர்ந்த மனப்பான்மையும் சமூகத்தில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாராட்டப்படுகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook