கச்சத்தீவு அருகே 5 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

கச்சத்தீவு அருகே 5 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

கச்சத்தீவு அருகே 5 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

இராமநாதபுரம்:

கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஐவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று அதிகாலை, ராமேஸ்வரம் பாம்பன் கடற்கரையிலிருந்து புறப்பட்டு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்பாக தமிழக மீனவர்களிடையே கடும் பதற்றம் நிலவுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook