குற்றவாளிகளுடன் தொடர்பு: 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்.

தாம்பரம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட மணிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றிய எழுத்தர் கோபி மற்றும் தனிப்படை காவலர் மகேஷ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததுடன், அவர்களிடம் பணம் பெற்றதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தவறு செய்பவர்களுக்கு உடந்தையாக செயல்படும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் காவல் துணை ஆணையர் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read More

Facebook