சென்னையில் மாா்ச் 19-ஆம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என ஆட்டோ ஓட்டுநா்களுக்கான அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடா்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சம்மேளனத்தின் செயல் தலைவருமான எஸ்.பாலசுப்பிரமணியம், செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2013-இல் ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அதாவது, 1.8 கிலோ மீட்டருக்கு ரூ. 25 எனவும், அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 12 எனவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு
Category: சமீபத்திய செய்திகள்
அரசு மகப்பேறு மருத்துவமனை. குழந்தை பிறந்தது முதல், வீட்டிற்குச் செல்லும் வரை பணம். இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பது யார்?
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவ அறையில் பணிபுரியும் பெண்மணிகள்,ஆண் குழந்தை பிறந்தால் 1500 ரூபாயும், பெண் குழந்தை பிறந்தால் 1,000 ரூபாயும் வாங்குவது வழக்கமாக வைத்துள்ளனர். மற்றும் பிரசவ அறையில் சுத்தம் செய்பவர்களுக்கு பணம். பிரசவ அறையில் இருந்து அடுத்த அறைக்கு மாற்றுபவர்களுக்கும் பணம். தள்ளுவண்டியில் அமர வைத்து தள்ளுபவர்களுக்கும் பணம். குழந்தை பிறந்தவர்களை பார்க்கச் செல்வதற்கு வாசலில் அமர்ந்திருப்பவர்களுக்கு பணம், இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும்
அரசு ஸ்டான்லி மருத்துவமனை. குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் நோயாளிகள்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒவ்வொரு நோய்களுக்கும், தனித்தனியாக பல கட்டிடங்களாக பிரித்து நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவம் வழங்கி வருகிறது. ஆனால், தங்கி மருத்துவம் பார்க்கும், நோயாளிகளுக்கு குடிதண்ணீர் வசதி இல்லை என்று நோயாளிகள் கவலைப்படுகின்றனர். பணம் உள்ளவர்கள் தண்ணீர் கேன் வாங்கி குடிப்பதாகவும், ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள், வெளியூரில் இருந்து வந்து தங்கி மருத்துவம் பார்க்கும் இல்லாதவர்கள். துணைக்கு ஆளில்லாத தனி நோயாளிகள் என பலரும், தன்ணீருக்கே கஷ்டப்படுவதாகவும்,
ஆதரவற்ற முதியவர் மரணம்! நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்!
திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காந்தி அஸ்தி மண்டபம் அருகே உள்ள வயலூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். இது குறித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தினர் விசாரணை செய்ததில் யாசகம் கேட்டு ஜீவனம் நடத்தி அங்குள்ள கடைகளுக்கு முன்பு உண்டு, உறங்கியும் ஆதரவற்றவராய் வாழ்ந்து வந்துள்ளார்.
தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம். எம்.எல்.ஏ பங்கேற்பு.
அரக்கோணம் MRF தொழிற்சாலையில் அரக்கோணம் சுற்றவட்டாரித்தில் இருந்து வந்து பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் MRF தொழிற்சாலை வெளியே மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்…இதில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி BA BL.,MLA கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து MRF நிர்வாகத்திடம் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் 9150223444…
பிரபல தொழிலதிபர் ஆற்காடு ஏ.வி.சாரதி, வள்ளி மலையில் தலைவராக பொறுப்பேற்றார்.
தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சார்பில் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் கந்தனை மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆற்காடு மூகாம்பிகை டிரேடர்ஸ் உரிமையாளரும் தொழிலதிபருமான திமுக மாவட்ட பொருளாளர் A.V.சாரதி கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக நேற்று கோவில் மணி மண்டபத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் உறுதி எடுத்துக் கொண்டு பதவி ஏற்று கொண்டார்.உடன் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள்
T.H.ROAD நடைபாதை கடைகள் அகற்றம். 500 ரூபாய் அபராதம்.
சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மண்டலம் 04. பகுதி 10, கோட்டம் 42க்கு உட்பட்ட T.H.ROAD உள்ள நடைபாதை கடைகள் அனைத்தையும் அகற்ற கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி ஊழியர்கள் அறிக்கை ஒன்றை நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின்படி, உதவி பொறியாளர் பாபு தலைமையில் 10 துக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நடைபாதை கடைகள், நடைபாதையில்
ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி சித்தர் மலர்களால் ஆசி வழங்கினார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம். வள்ளிமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக பதவியேற்கும் எங்கள் ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி ஆலய அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் A.V.சாரதி அவருக்கு ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி சித்தர் மலர்களால் ஆசி வழங்கினார். மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் 9150223444
T.H.ரோடு நடைபாதை வியாபாரிகளுக்கு.
பெருநகர சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு. சென்னை வண்ணாரப்பேட்டை. T.H.ROAD பிரதான சாலையில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு முக்கிய அறிவிப்பை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வரும் 17.03.2025 அன்று மாநகராட்சி நடைபாதையில் மண்டலம் 04. பகுதி 10, கோட்டம் 42க்கு உட்பட்ட T.H.ROAD உள்ள கடைகள் அனைத்தையும் அகற்ற போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை தவிர்க்க வியாபாரிகள் தாங்களாகவே நடைபாதை ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்துமாறு