கோவை: சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த 24 வயதுடைய இளைஞர் மோனிக் ராஜ் அவர்களின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக வழங்கி மனிதநேயத்தின் உயர்ந்த எடுத்துக்காட்டை உருவாக்கியுள்ளனர். விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த மோனிக் ராஜ் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் மனிதாபிமான மனப்பான்மையுடன் இதயம், சிறுநீரகங்கள் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை தானமாக அளிக்க சம்மதித்தனர். அவரது உடல் உறுப்புகள்
Category: சமீபத்திய செய்திகள்
கொடுங்கையூரில் K.G. பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சாயீ விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் “K.G. பட்டமளிப்பு விழா” இன்று காலை அப்பள்ளியின் டேக் வள்ளலார் அரங்கத்தில் பள்ளி தாளாளர் டி.எஸ். தியாகராஜன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா பள்ளி முதல்வர் டி.எல். சுந்தரதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. மாணவர்கள் ரைம்ஸ் பாடுதல், கதை சொல்லுதல் மற்றும் இனிய பாடல்களை பாடி கலைநிகழ்ச்சிகள் வழங்கி விழாவை சிறப்பாக
தந்தையின் கனவை நினைவாக்கும் மகன் ஹரி பிரபு
சென்னை: வட சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வசிக்கும் பொதுமக்களின் நலனை முன்னிட்டு தெய்வதிரு மனோகரா பூபதி அறக்கட்டளை சார்பில் இலவச உணவு மற்றும் இலவச கல்வி வழங்கும் சமூகப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. “முதலில் தட்டில் நிரப்புவோம், பிறகு புத்தகத்தைத் திறப்போம்” என்ற உயர்ந்த நோக்கத்துடன், பசியால் கல்வி தடைபடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மறைந்த தெய்வதிரு மனோகரா பூபதியின் சமூக சேவை
ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை அருகே தினசரி அன்னதானம் துவக்கம்.
சென்னை, மார்ச் 6 : சென்னையில் ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை அருகில், தெய்வத்திரு ஐயா மனோகர் பூபதி அவர்களின் நினைவாக தொடங்கப்பட்ட மனோகர் பூபதி அறக்கட்டளை சார்பில் இன்று (மார்ச் 6) முதல் தினசரி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வின் மூலம், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்
காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து கடும் கண்டனம் – 90 சதவீதம் ஊழல்வாதிகள்.
சென்னை, பிப்.14: சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்யப்பட்ட ஒரு அவமதிப்பு மனுவை முடித்து வைத்து வழங்கிய தீர்ப்பில், நீதிபதி பி.வேல்முருகன் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கருத்துக்களை பதிவு செய்தார். தற்போதைய நிலையில் காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவோ அல்லது குற்றவியல் விசாரணைகளை திறம்பட நடத்த போதுமான திறன் இல்லாதவர்களாகவோ உள்ளனர் என்றும், 10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையும் திறமையும் கொண்டவர்களாக செயல்படுகின்றனர் என்றும்
ஏழு பேருக்கு மறுவாழ்வளித்த 14 வயது சிறுவன் – குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு
திருச்சி, திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். மருத்துவக் குழுவினர் மூளைச்சாவை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சிறுவனின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் கல்லீரல், கணையம், சிறுகுடல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்கள் மற்றும் தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதில் ஒரு
ஆர்.கே.நகர் தொகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் தினந்தோறும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி ஊழியர்கள் வீடு தோறும் சென்று புகை மூட்டுதல், கொசு வளரக்கூடிய இடங்களில் மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. கொசு மூலம் பரவும்
உரிமை கோரப்படாத அனாதை பிணங்களுக்கு மரியாதை – சமூக சேவையாளருக்கு ஆளுநர் விருது
திருச்சிராப்பள்ளி, ஜன.26 : உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிரேதங்களுக்கு மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளருக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஆளுநர் விருது வழங்கப்பட்டது. சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது, மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. அமிர்தம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருக்கு விருது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக
தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரின் கார் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தஞ்சாவூர் அருகே தென்னமநாடு பகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரின் கார் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து, முதியவர் பைக்கில் சாலையை கடக்க முயன்ற போது நேர்ந்ததாக அறியப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி, சம்பவத்துக்குப் பின் போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டு, கார் ஓட்டுனர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகரத்து மற்றும் மாவட்ட போலீசார் சம்பவத்தின் காரணங்களை விரைவில் கண்டறிந்து
அதிகாரிகள் மீது வழக்கு பதிவு. “அஜாக்கிரதையாக” செயல்பாடு.
திருவள்ளூரில் அரண்மனை பள்ளி சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த நிகழ்வில், சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் அடங்கும். வழக்கு பதிவு செய்யப்பட்டது, சம்பவத்தில் பொறுப்பாளராக செயல்பட்டவர்கள் “அஜாக்கிரதையாக” செயல்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆர்.கே.பேட்டை அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,

