திருப்பத்தூரை அடுத்த காக்கனாம்பாளையத்தில், ஆந்திராவில் இருந்து கடத்தி கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்தனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு, செம்மரக் கடத்தல் மன்னர்களின் கூடாரமாக மாறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Category: குற்றம்
சபரிமலை கோயிலில் தங்கம் எடை குறைவு – உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு
சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தங்கத்தில் காப்பர் கலந்துள்ளதால், அதன் எடை குறைந்ததாக புகார் எழுந்துள்ளது. மொத்தம் நான்கரை கிலோ தங்கம் இந்த சிலைகளுக்கு வழங்கப்பட்டதாகும். ஆனால், தற்போது எடை குறைவாக இருப்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கண்காணிப்புத் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகைக்கடையில் கத்திக்காட்டி கொள்ளையடிக்க முயன்ற பெண் கைது
சென்னையில் நகைக்கடையில் கத்திக்காட்டி கொள்ளையடிக்க முயன்ற பெண் கைது சென்னை திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பான சம்பவம் இடம்பெற்றது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் 40 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருபவர் தேவராஜ் (65). நேற்று மதியம் அந்தக் கடைக்கு பர்தா அணிந்த நிலையில் வந்த பெண் ஒருவர், நகை வாங்குவது போல் நடித்து, மூன்று சவரன் தங்கச் சங்கிலி, ஒரு சவரன் வளையல், ஒரு சவரன் கம்பல் என மொத்தம்
அதிகாலையில் பிரியாணி சாப்பிட வந்தவர்களை வழிப்பறி – போலீசாரை தாக்கிய கொள்ளையர்கள் கைது
சென்னை அண்ணாநகர் பகுதியில் அதிகாலையில் பிரியாணி சாப்பிட வந்த இளைஞரை வழிப்பறி செய்த இருவர், பின்னர் போலீசாரையே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியைச் சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன், தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அண்ணாநகர் ஸ்டீபன் சாலையில் பிரியாணி சாப்பிட வந்திருந்தார். அப்போது, ஹர்ஷித் மற்றும் சல்மான் பாஷா எனும் இருவர் அவரை திடீரென தாக்கி, செல்போன் மற்றும் ரூ.2,000 பணத்தை பறித்து தப்பி சென்றனர். இந்த
வீட்டுமனை மோசடி – சகோதரிகள் கைது!
சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டுமனை வழங்குவதாக கூறி ஏமாற்றிய வழக்கில் இரு சகோதரிகள் கைது செய்யப்பட்டனர். Lakshmi Classic Homes Pvt. Ltd., என்ற தனியார் நிறுவனத்தை நடத்திவந்த அம்சவேனி மற்றும் ஸ்ரீலட்சுமி ஆகிய சகோதரிகள், 26 பேரிடமிருந்து சுமார் ரூ.3.71 கோடி முதலீடு பெற்றனர். வீட்டுமனை வழங்குவதாக நம்பிக்கை அளித்தும், நிலம் தரப்படாமல் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து,
அரசு மருத்துவமனையில் நோயாளி தந்தையை வீல் சேர் இல்லாமல் இழுத்துச் சென்ற மகன்
கோவை அரசு பொது மருத்துவமனையில், சிகிச்சை முடித்து வெளியேறிய வயதான தந்தையை ஆட்டோவிற்கு அழைத்துச் செல்ல வீல் சேர் கேட்ட மகன், நீண்ட நேரம் காத்திருந்தும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தபோதிலும், மருத்துவமனை ஊழியர்கள் வீல் சேர் வழங்க மறுத்ததாக அவர் கூறியுள்ளார். இதனால், சிகிச்சை முடித்த தந்தையை தானே இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் சரியாக வழங்கப்படாததால், நோயாளிகள்
8 மாதங்களில் 228 பேர் பலி – தண்டவாளம் கடக்கும் அபாயம் குறித்து தெற்கு ரயில்வே எச்சரிக்கை
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தண்டவாளம் கடக்கும் போது ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 8 மாதங்களிலேயே மட்டும் 228 பேர் இப்படியான விபத்துகளில் பலியாகியுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பாதைகள் வழியாக சட்டவிரோதமாக தண்டவாளத்தை கடக்க முயல்வது, ஓடும் ரயிலில் ஏற முயல்வது, படியில் தொங்கிப் பயணிப்பது போன்றவை உயிருக்கு ஆபத்தான செயல்கள் என
மதுரை தாசில்தார் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
மதுரை: கிரஷர் அமைப்பதற்கான அனுமதிக்காக ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் அவரது டிரைவர் ராம்கே என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
வாகன ஓட்டிகளுக்கு அரிய வாய்ப்பு: TRAFFIC FINE-களை குறைக்கும் திட்டம்
சென்னை: வாகன ஓட்டிகள், உங்கள் நிலுவையில் உள்ள TRAFFIC FINE-களை முழுமையாக அல்லது 50% வரை குறைக்க அரிய வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பு 2025, செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய லோக் அதாலத் திட்டத்தின் போது வழங்கப்படுகிறது. ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாமை, சிக்னலில் நிற்காமல் செல்வது போன்ற 13 விதமான போக்குவரத்து விதிமீறல்களில் உங்கள் மீது விதிக்கப்பட்ட அபராதம் குறைக்கப்படும். இதற்காக, முதலில் National Legal
ஏர்போர்ட் மூர்த்தி கைது. கருத்து கூறியது பிடிக்காமல் விசிக கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர்.
சென்னை, செப்.9 – புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது கடந்த 6-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 4 பேர் தாக்குதல் நடத்தினர். சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே நடந்த மோதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2 பேர் காயமடைந்தனர். இருதரப்பும் மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததால், இருபுறத்துக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் நேற்று முன்தினம்

