தமிழ்மொழி, இலக்கியம் குறித்த விழிப்புணர்வு உரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது இனிய நந்தவனம் பதிப்பகம் சார்பில் சண் தவராஜா நூல் வெளியீடு – தமிழ்மொழி, இலக்கியம் குறித்த விழிப்புணர்வு உரைகள்   திருச்சி, அக். 27: இனிய நந்தவனம் பதிப்பகம் சார்பில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் சண் தவராஜாவின் “சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள்” நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. விழாவில் மணவைத் தமிழ் மன்ற செயலாளர்,

Read More

தமிழர் பெருமையை வெளிக்கொணரும் கல்வெட்டுச் சான்றுகள்

சித்தன்னவாசல் சமணர் படுக்கையில் தமிழிக் கல்வெட்டு! புதுக்கோட்டையில் வரலாற்று மரபு பயணம் – தமிழர் பெருமையை வெளிக்கொணரும் கல்வெட்டுச் சான்றுகள்   புதுக்கோட்டை, அக். 27: திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் மலைப்பகுதியில் அமைந்துள்ள சமணர் படுக்கை மற்றும் தமிழிக் கல்வெட்டு குறித்து அறிய மரபு பயணம் மேற்கொள்ளப்பட்டது.   இப்பயணத்தில் குழுத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன்,

Read More

தேங்கி நின்ற மழைநீரில் தவறி விழுந்து சிறுமி

மாங்காடு பகுதியில் தேங்கி நின்ற மழைநீரில் தவறி விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு ஜனனி நகர் அனெக்ஸ் பகுதியைச் சேர்ந்த சந்தீப் குமார் (28) லிப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பிரியதர்ஷினி (25) அம்பத்தூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு இரண்டு வயது மகள் பிரினிகாஸ்ரீ இருந்தார். நேற்று முன்தினம் இரவு பிரியதர்ஷினி தனது மகளுடன் மதிய

Read More

தலைமைச் செயலாளர். மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை 2025–ம் ஆண்டிற்கான மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்தும், மேலும் அனைத்துத் துறைகளின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்

Read More

ரூ.2 லட்சம் லஞ்சம் – தாசில்தார் கைது

திருச்சி: திருச்சியில் லஞ்சம் வாங்கிய தாசில்தார் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த தாசில்தார் அண்ணாதுரை, ஒரு நபரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றதாக தகவல். இந்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் பாசாங்கு நடவடிக்கையில் ஈடுபட்டு, பணம் பெற்றுக்கொண்ட அண்ணாதுரையை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

Read More

நீரஜ் சோப்ராவுக்கு கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி

புது டெல்லி: ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவை பெருமைப்பட வைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தற்போது புதிய கௌரவ பொறுப்பை பெற்றுள்ளார். அவருக்கு இந்திய ராணுவத்தின் பிராந்திய பிரிவில் “கௌரவ லெப்டினன்ட் கர்னல்” பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த பெருமையைப் பெற்றதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நீரஜ் சோப்ராவை வாழ்த்தி, “நீரஜ் சோப்ரா விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, நாட்டிற்கும் சிறந்த முறையில் சேவை செய்து வருகிறார்” என்று

Read More

மதிப்பெண்ணில் பொறாமை. தாயாருக்கு ஆயுள் தண்டனை.

காரைக்கால்: 2022 ஆம் ஆண்டு காரைக்காலில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக, ஒரு பெண்ணுக்கு காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அந்த ஆண்டு, காரைக்காலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், பெண்ணின் மகளுடன் 8-ம் வகுப்பு மாணவன் ஒருவர் போட்டியாளராக இருந்தார். இதனால் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக, அந்த மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் நடந்த நீண்ட விசாரணையின் பிறகு,

Read More

காவல்துறை துணைத்தலைவர் தலைமையில் குற்றக் கலந்தாய்வு கூட்டம்!

ராணிப்பேட்டையில் வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் தலைமையில் குற்றக் கலந்தாய்வு கூட்டம்! ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் Dr. ஜி. தர்மராஜன் தலைமையில் குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Read More

மின்னல் தாக்கி நால்வர் பலி — கடலூரில் சோகம்!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே: இன்றைய மாலை நேரத்தில் ஏற்பட்ட திடீர் மின்னல் தாக்கத்தில் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உயிரிழந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேப்பூர் அருகே உள்ள கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப் பொண்ணு, கணிதா ஆகியோர் மீது மின்னல் விழுந்தது. நால்வரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே சம்பவத்தில் தவமணி என்ற பெண் கடுமையாக காயமடைந்து அருகிலுள்ள அரசு

Read More

லெதர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி இருவர் பலி!

ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி.மோட்டூர் அருகே உள்ள கே.ஏ. ரஹீத் என்ற லெதர் தொழிற்சாலையில் துயர சம்பவம் ஒன்று நடைபெற்றது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது ஏற்பட்ட விஷவாயு தாக்கத்தால், வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராமன் (47) என்பவர் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், வழியிலேயே உயிரிழந்ததாக தகவல். அதே பணியில் ஈடுபட்டிருந்த தொழிற்சாலை உரிமையாளரான கே.ஏ. ரைஸ் அஹமது (44) மற்றும் வி.சி.மோட்டூர்

Read More

Facebook