பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பதவியேற்றார்

சென்னை, ஆக.31 – தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ். இன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி பதவிக்கு ஐ.பி.எஸ் அதிகாரி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கட்ராமன் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தன்னுடைய முழு திறனையும் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

Read More

தோழி மிரட்டியதால் மாணவி தற்கொலை

கடலூர், ஆக.31 – கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் வசித்து வந்த 18 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கடலூர் அருகே உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்த அவர், அதே கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த ரெட்டிச்சாவடி பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவியுடன் நெருக்கமாக பழகி வந்தார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனவருத்தம் ஏற்பட்டதாக

Read More

கண்டக்டர்களிடம் சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனை – எம்டிசி பரிசீலனை

சென்னை, ஆக.31 – சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சார்பில் தற்போது சிங்கார சென்னை பயண அட்டைகள், குறிப்பிட்ட விற்பனை மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இனி பயணிகள் நேரடியாக பேருந்து கண்டக்டர்களிடமிருந்தே இவ்வட்டைகளை வாங்கும் வசதி ஏற்படுத்தும் வகையில் எம்டிசி பரிசீலித்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள மாதாந்திர பஸ் பயண அட்டைகள் தற்போது எம்டிசி

Read More

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

சென்னை, ஆக.30– சென்னை ராயபுரம் பகுதியில், கட்டிட தொழிலாளி ஒருவர் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை சோமுசெட்டி 1-வது தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (39) கட்டிட தொழிலாளி ஆவார். நேற்று முன்தினம் இரவு மது அருந்திய நிலையில், கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்தின் 3-வது மாடி மொட்டைமாடியில் தனியாக தூங்கச் சென்றார். அப்போது தவறி கீழே விழுந்த

Read More

ஓட்டேரியில் உறவினரின் வாகனத்தை எரித்த வாலிபர் கைது

சென்னை, ஆக.30– சென்னை ஓட்டேரி பகுதியில், வீட்டை எழுதி தருமாறு உறவினரிடம் கோரிய வாலிபர், தகராறு காரணமாக அவரது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் வசந்தகுமார் (45), கார் டிரைவர். இவரது வீட்டின் மேல் தளத்தில் உறவினரான விக்னேஷ் (25) வசித்து வருகிறார். நேற்று அதிகாலை, மாடி பகுதியில் உள்ள வீட்டை தமக்கே எழுதி தருமாறு விக்னேஷ், வசந்தகுமாரிடம் கோரியுள்ளார். இதனை

Read More

இறுதி அறிக்கையை கண்காணிக்க தவறியதாக குற்றச்சாட்டு: 5 போலீஸ் சூப்பிரண்டுகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தடை.

சென்னை, ஆகஸ்ட் 30: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தவறிய விவகாரம் தொடர்பாக, 5 போலீஸ் சூப்பிரண்டுகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு முடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தாலும், அதற்கான இறுதி அறிக்கை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாதது விசாரணையின்

Read More

ஓய்வு பெறும் தமிழக டிஜிபி சங்கர் ஜீவா – புதிய பொறுப்பாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆணையராக நியமனம்

சென்னை: தமிழக காவல்துறையில் நீண்ட கால அனுபவமும் சிறப்பான சேவையும் ஆற்றிய மாநில காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) சங்கர் ஜிவால் அவர்கள், ஓய்வு பெற உள்ள நிலையில், தமிழக அரசு அவருக்கு புதிய பொறுப்பை வழங்கியுள்ளது. அவர், இனி தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை சேவையில் சிறப்பான பயணம் சங்கர் ஜிவால், இந்திய போலீஸ் சேவையில் (IPS) 1989-ம் ஆண்டு தமிழ்நாடு கேட்ரில்

Read More

முதல்வர் மு.க. ஸ்டாலின் – கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு

சென்னை: தமிழக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை அரசு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு அவர்களை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதல்வர், மருத்துவர்களிடம் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விரிவாக கேட்டறிந்து, அவருக்கு தேவையான அனைத்துவித சிகிச்சை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், நல்லகண்ணு

Read More

கொளத்தூரில் கல்லூரி கட்டும் நில விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதுடெல்லி, ஆக.30: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியிலிருந்து நடத்தப்பட்டு வரும் கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி, தற்போது கொளத்தூரில் இயங்கி வருகிறது. கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க, கொளத்தூர் சோமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் அரசாணை கடந்த ஆண்டு தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ், “கோவில் நிலத்தை கல்வி நிறுவனத்துக்கு குத்தகைக்கு

Read More

உடல் நலம் காக்கும் யோகா தியான பயிற்சி!

திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை வெல்னஸ் கிளப், ஸ்கில் செட் அகாடமி சார்பில் உடல் நலம் காக்கும் யோகா , தியான பயிற்சி வகுப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி இணை முதல்வர் முனைவர் குமார் தலைமை வகித்தார். முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை தலைவர் முனைவர் மகேஸ்வரி துவக்க உரையாற்றினார். முனைவர் ஜான் பிரபாகரன், ரஜீஷ், லட்சுமி பிரியா,

Read More

Facebook