சென்னை மாநகர காவல்துறை, வாகன ஓட்டிகளுக்கான புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி, போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்தினால்தான், இனி வாகனங்களின் இன்சூரன்ஸ் புதுப்பிக்க அனுமதி வழங்கப்படும். தற்போது சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான அபராதத் தொகை நிலுவையில் உள்ளதாகவும், இதனை வசூல் செய்வதற்காக காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை
Author: vnewstamil
வீட்டுமனை மோசடி – சகோதரிகள் கைது!
சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டுமனை வழங்குவதாக கூறி ஏமாற்றிய வழக்கில் இரு சகோதரிகள் கைது செய்யப்பட்டனர். Lakshmi Classic Homes Pvt. Ltd., என்ற தனியார் நிறுவனத்தை நடத்திவந்த அம்சவேனி மற்றும் ஸ்ரீலட்சுமி ஆகிய சகோதரிகள், 26 பேரிடமிருந்து சுமார் ரூ.3.71 கோடி முதலீடு பெற்றனர். வீட்டுமனை வழங்குவதாக நம்பிக்கை அளித்தும், நிலம் தரப்படாமல் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து,
அரசு மருத்துவமனையில் நோயாளி தந்தையை வீல் சேர் இல்லாமல் இழுத்துச் சென்ற மகன்
கோவை அரசு பொது மருத்துவமனையில், சிகிச்சை முடித்து வெளியேறிய வயதான தந்தையை ஆட்டோவிற்கு அழைத்துச் செல்ல வீல் சேர் கேட்ட மகன், நீண்ட நேரம் காத்திருந்தும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தபோதிலும், மருத்துவமனை ஊழியர்கள் வீல் சேர் வழங்க மறுத்ததாக அவர் கூறியுள்ளார். இதனால், சிகிச்சை முடித்த தந்தையை தானே இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் சரியாக வழங்கப்படாததால், நோயாளிகள்
வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் விருது
ராணிப்பேட்டை: “தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலைய விருது” வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை, காவல் நிலையம் சார்பாக ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா, சென்னையில் நடைபெற்ற விழாவில் காவல்துறை தலைமை இயக்குநரிடமிருந்து பெற்றார். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன்ஜமால், ஆய்வாளர் சாலமோன் ராஜாவை வாழ்த்தி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் இமயவர்மன் கலந்து கொண்டார். செய்தி:ஆர்.ஜே.சுரேஷ்
8 மாதங்களில் 228 பேர் பலி – தண்டவாளம் கடக்கும் அபாயம் குறித்து தெற்கு ரயில்வே எச்சரிக்கை
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தண்டவாளம் கடக்கும் போது ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 8 மாதங்களிலேயே மட்டும் 228 பேர் இப்படியான விபத்துகளில் பலியாகியுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பாதைகள் வழியாக சட்டவிரோதமாக தண்டவாளத்தை கடக்க முயல்வது, ஓடும் ரயிலில் ஏற முயல்வது, படியில் தொங்கிப் பயணிப்பது போன்றவை உயிருக்கு ஆபத்தான செயல்கள் என
மதுரை தாசில்தார் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
மதுரை: கிரஷர் அமைப்பதற்கான அனுமதிக்காக ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் அவரது டிரைவர் ராம்கே என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள்
தமிழகத்தில் ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அலுவலகங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை. தீயணைப்புத் துறை மற்றும்மீட்பு பணிகள் துறை இயக்குனர். சீமா அகர்வால். வடமேற்கு மண்டலத்திற்குட்பட்ட தீயணைப்பு நிலையங்களின் வருடாந்திர ஆய்வு கூட்டம். இன்று வேலூர் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில்
வாகன ஓட்டிகளுக்கு அரிய வாய்ப்பு: TRAFFIC FINE-களை குறைக்கும் திட்டம்
சென்னை: வாகன ஓட்டிகள், உங்கள் நிலுவையில் உள்ள TRAFFIC FINE-களை முழுமையாக அல்லது 50% வரை குறைக்க அரிய வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பு 2025, செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய லோக் அதாலத் திட்டத்தின் போது வழங்கப்படுகிறது. ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாமை, சிக்னலில் நிற்காமல் செல்வது போன்ற 13 விதமான போக்குவரத்து விதிமீறல்களில் உங்கள் மீது விதிக்கப்பட்ட அபராதம் குறைக்கப்படும். இதற்காக, முதலில் National Legal
ஏர்போர்ட் மூர்த்தி கைது. கருத்து கூறியது பிடிக்காமல் விசிக கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர்.
சென்னை, செப்.9 – புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது கடந்த 6-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 4 பேர் தாக்குதல் நடத்தினர். சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே நடந்த மோதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2 பேர் காயமடைந்தனர். இருதரப்பும் மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததால், இருபுறத்துக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் நேற்று முன்தினம்
மதுரை வக்கீல் மரணம் தொடர்பாக போலீசாருக்கு அபராதம்
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல் முருகேசன் (30) மரணத்திற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், வக்கீலை தவறாக கைது செய்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மனித உரிமை ஆணையம் இதை உறுதி செய்து, போலீசாரின் மீது நடவடிக்கை எடுக்கவும், மரணமடைந்த வக்கீலின் குடும்பத்திற்கு ₹2.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு

