திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு முருகன் (45) கள் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
போலீஸ் துறையின் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

