ஏர்போர்ட் மூர்த்தி கைது.  கருத்து கூறியது பிடிக்காமல் விசிக கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர்.

ஏர்போர்ட் மூர்த்தி கைது. கருத்து கூறியது பிடிக்காமல் விசிக கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர்.

சென்னை, செப்.9 – புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது கடந்த 6-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 4 பேர் தாக்குதல் நடத்தினர். சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே நடந்த மோதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2 பேர் காயமடைந்தனர்.

இருதரப்பும் மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததால், இருபுறத்துக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் நேற்று முன்தினம் இரவு கைதுசெய்து, சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுப்பினர். சிகிச்சை முடிந்த பிறகு, எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 22-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க உத்தரவிட்டார். 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook