திருப்பூரில் வழக்கறிஞர் முருகானந்த் வெட்டிக்கொலை – பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த முருகானந்த் (35), தனது சொந்த ஊரான தாராபுரம் அருகே வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட மோதலில் மர்ம நபர்கள் அவரை ரோம்பவிதமாக தாக்கியுள்ளனர். இதில் கடுமையாக காயமடைந்த முருகானந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலைக்குப்பின் குற்றவாளிகள் தப்பிச் சென்ற நிலையில், போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

