திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் திருச்சி மேலப்பாண்டமங்கலம் ஆர் தயாநிதி நினைவு வித்யாசாலா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் துணிப்பைகளை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும்
Category: ட்ரெண்டிங்
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் நிரந்தரமாக நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த என். செந்தில்குமார், ஜி. அருள்முருகன் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில், நேற்று இருவரும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஜெ.
காஷ்மீர் இளைஞர் கைது – பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த குற்றச்சாட்டு
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து தந்ததாக தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் ஆதரவாளர்கள் உதவியிருக்கிறார்களா என்பதை விசாரிக்கும் நிலையில், அந்த இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அவரை கைது செய்தனர். உள்ளூர் நபர்கள் இன்னும் யாரேனும் இதில் தொடர்புடையவர்களா என்பதை கண்டறிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
09அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (FERA )சார்பாக வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி சங்கங்களின் 9 அம்ச கோரிக்கைகவருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (FERA )சார்பாக வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி சங்கங்களின் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் தலைவர் பா.சிவக்குமார் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது . இந்த போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக
காவல் உதவி ஆய்வாளர் கைது. பெண்ணை கொலை செய்ய முயன்றதால்.
தருமபுரி அருகே அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுடன், அங்கு பணியாற்றிய துணை காவல் ஆய்வாளர் (SSI) தவறான தொடர்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், அந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்த நிலையில், சம்பவம் வெளிச்சம் பார்க்காமல் தடுக்கும் நோக்கில் பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக குற்றம்
16 வயது சிறுவன் தாக்கப்பட்டு உயிரிழப்பு
சென்னை வில்லிவாக்கத்தில் வேகமாக பைக்கில் சென்றதால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 16 வயது சிறுவன் ஹர்ஷ வர்தன் கற்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூரைச் சேர்ந்த ஹர்ஷ வர்தன் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், 4 சிறுவர்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிலரை தேடிச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப்
சென்னையில் புதிய நடைமுறை: அபராதம் செலுத்தினால்தான் இன்சூரன்ஸ் புதுப்பிப்பு
சென்னை மாநகர காவல்துறை, வாகன ஓட்டிகளுக்கான புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி, போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்தினால்தான், இனி வாகனங்களின் இன்சூரன்ஸ் புதுப்பிக்க அனுமதி வழங்கப்படும். தற்போது சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான அபராதத் தொகை நிலுவையில் உள்ளதாகவும், இதனை வசூல் செய்வதற்காக காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை
வீட்டுமனை மோசடி – சகோதரிகள் கைது!
சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டுமனை வழங்குவதாக கூறி ஏமாற்றிய வழக்கில் இரு சகோதரிகள் கைது செய்யப்பட்டனர். Lakshmi Classic Homes Pvt. Ltd., என்ற தனியார் நிறுவனத்தை நடத்திவந்த அம்சவேனி மற்றும் ஸ்ரீலட்சுமி ஆகிய சகோதரிகள், 26 பேரிடமிருந்து சுமார் ரூ.3.71 கோடி முதலீடு பெற்றனர். வீட்டுமனை வழங்குவதாக நம்பிக்கை அளித்தும், நிலம் தரப்படாமல் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து,
காதலனுடன் சென்ற இளம்பெண் – கூட்டுப் பாலியல் பலாத்காரம்; 3 வாலிபர்கள் அதிரடி கைது
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள ராணிப்பேட்டை பகுதியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 19 வயது இளம்பெண், தனது காதலனுடன் சேர்ந்து வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள பஸ்ஸ்டாண்டுக்கு சென்றிருந்தார். அப்போது மூவர் கொண்ட கும்பல், அவர்களை மிரட்டி, அருகிலிருந்த தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், இளம்பெண்ணை கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண் புகாரளித்ததை அடுத்து, போலீசார் உடனடியாக விசாரணை நடத்தினர். அதில் சம்பவத்தில் ஈடுபட்டதாக
வக்கீல் வீட்டில் திருடிய த.வே.க. பெண் நிர்வாகி கைது
கன்னியாகுமரி மாவட்டம் அரும்பணியில் உள்ள வீட்டில், வக்கீல் விஜயகுமார் குடும்பத்துடன் தங்கியிருந்த த.வே.க. பெண்கள் நிர்வாகி அர்ஷிதா டிப்னி (28) மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தன்று, அர்ஷிதா தனது உடல்நிலை சரியில்லையென கூறி வீட்டு அறைக்குள் சென்றபோது, அங்கு இருந்த தங்க நகைகளை திருடியதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களில் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறிய அவர், அருகே 90 செ.மீ. தூரத்தில் நகைகளை புதைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

