மதுரை வக்கீல் மரணம் தொடர்பாக போலீசாருக்கு அபராதம்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல் முருகேசன் (30) மரணத்திற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், வக்கீலை தவறாக கைது செய்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மனித உரிமை ஆணையம் இதை உறுதி செய்து, போலீசாரின் மீது நடவடிக்கை எடுக்கவும், மரணமடைந்த வக்கீலின் குடும்பத்திற்கு ₹2.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு

Read More

காதலனுடன் சென்ற இளம்பெண் – கூட்டுப் பாலியல் பலாத்காரம்; 3 வாலிபர்கள் அதிரடி கைது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள ராணிப்பேட்டை பகுதியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 19 வயது இளம்பெண், தனது காதலனுடன் சேர்ந்து வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள பஸ்ஸ்டாண்டுக்கு சென்றிருந்தார். அப்போது மூவர் கொண்ட கும்பல், அவர்களை மிரட்டி, அருகிலிருந்த தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், இளம்பெண்ணை கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண் புகாரளித்ததை அடுத்து, போலீசார் உடனடியாக விசாரணை நடத்தினர். அதில் சம்பவத்தில் ஈடுபட்டதாக

Read More

வக்கீல் வீட்டில் திருடிய த.வே.க. பெண் நிர்வாகி கைது

கன்னியாகுமரி மாவட்டம் அரும்பணியில் உள்ள வீட்டில், வக்கீல் விஜயகுமார் குடும்பத்துடன் தங்கியிருந்த த.வே.க. பெண்கள் நிர்வாகி அர்ஷிதா டிப்னி (28) மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தன்று, அர்ஷிதா தனது உடல்நிலை சரியில்லையென கூறி வீட்டு அறைக்குள் சென்றபோது, அங்கு இருந்த தங்க நகைகளை திருடியதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களில் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறிய அவர், அருகே 90 செ.மீ. தூரத்தில் நகைகளை புதைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Read More

கொருக்குப்பேட்டையில் தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை, செப்.9 – மாநகராட்சி தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைத்ததை எதிர்த்து, ராயபுரம் மற்றும் திருவி.கா.நகர் மண்டலத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் நீண்டநாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கொருக்குப்பேட்டை ராஜீவ் காந்தி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று மாலை சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் போலீசாருக்கும் பணியாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து

Read More

புகார் மீது நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி கைது.

காஞ்சிபுரம் சட்டம் ஒழுங்கு டிஎஸ்பி சங்கர் கணேஷ், நீதிமன்ற உத்தரவின் பேரில் சீருடையுடன் நேரடியாக கைது செய்யப்பட்டார். முருகன் என்ற நபர் அளித்த புகாரில், ஒரு மாதமாக நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில், எஸ்சி/எஸ்டி தடுப்புச் சட்டம் பிரிவின் கீழ் டிஎஸ்பி சங்கர் கணேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது. காஞ்சிபுரம் நீதிமன்றம், அவரை வரும் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்த அதிர்ச்சி

Read More

மாற்றுத்திறனாளி தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை, செப் 3 – நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி கந்தசாமி தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் புதனன்று (செப் 3) மாவட்டத் துணை அமைப்பாளர் கே. பிச்சாண்டி தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்

Read More

சென்னை சூளைமேட்டில் பெண் விபத்து

சென்னை, சூளைமேடு வீரபாண்டி நகர் 1-ஆம் தெருவில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருந்தது. அந்த வழியாக நடந்து சென்ற ஒரு பெண், கவனக்குறைவால் பள்ளத்தில் விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் மக்கள், தோண்டப்பட்ட பள்ளங்களை பாதுகாப்பாக மூடாமல் விடுவதை கண்டித்து, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

ரூ.8 லட்சம் கடன் வாங்கிய வாலிபர் – திருப்பிச் செலுத்தாமல் பொய் புகார்:

சென்னை, செப்.1– சென்னை திருமங்கலம் ஜமீன்தார் தெருவை சேர்ந்த ரமேஷ் சந்த், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் தொடர்பான பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பெரம்பூர், தீட்டி தோட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (32), தனது மோட்டார் சைக்கிளின் ஆர்.சி. புத்தகத்தை அடமானம் வைத்து ரமேஷ் சந்திடம் ரூ.8 லட்சம் கடன் பெற்றார். பின்னர், அந்த ஆர்.சி. புத்தகம் தொலைந்துவிட்டதாகக் கூறி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் புகார் அளித்து டூப்ளிகேட் ஆர்.சி. புத்தகத்தை பெற்றார்.

Read More

முதலாம் ஆண்டு மாணவர் தாக்குதல் – 6 மூத்த மாணவர்கள் மீது வழக்கு

ஜார்கண்டில் ராகிங்: முதலாம் ஆண்டு மாணவர் தாக்குதல் – 6 மூத்த மாணவர்கள் மீது வழக்கு   ராஞ்சி, செப்.1 – ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் முருபண்டா கிராமத்தில் செயல்பட்டு வரும் ராம்கர் இன்ஜினீயரிங் கல்லூரியில் ராகிங் சம்பவம் இடம்பெற்றது. கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவரை, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக

Read More

எண்ணூரில் சாக்கடை பிரச்னை – மக்கள் வேதனை. கண்டுகொள்ளாத அதிகாரிகள்.

எண்ணூர் ராமகிருஷ்ணா நாலாவது தெரு பகுதியில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி கொண்டே வருகிறது. இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. கழிவுநீர் சாலையில் வழிந்து தேங்குவதால் அப்பகுதியில் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நிலவி வரும் சுகாதார அசௌகரியத்தை உடனடியாக தீர்க்க மாநகராட்சி உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த

Read More

Facebook