சேலம் எடப்பாடியில் கருவின் பாலினத்தை தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு சீல்! சேலம் மாவட்டம் எடப்பாடியில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கர்ப்பிணிப் பெண் ஒருவரை ஸ்கேன் செய்ய அனுப்பி வைத்த நிலையில், திடீரென உள்ளே நுழைந்த அதிகாரிகள், மருத்துவமனையின் செயல்பாடுகளை சோதனை செய்தனர். இதில், மருத்துவர் கண்ணன், அவரது மனைவி ஜோதி
Category: குற்றம்
நாகர்கோவில் சிறையில் கைதிகள் மோதல் – 2 பேர் காயம்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் கைதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பேச்சியப்பன், முத்துராஜ் ஆகிய இருவரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக 13 கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனைக்கு முற்றுகை போராட்டம்!
மதுரை: சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் இறந்து மூன்று நாட்கள் ஆனதை மறைத்து, ‘சிகிச்சை’ என்ற பெயரில் பணம் வசூலித்ததாக மதுரை வேலம்மாள் மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு சாட்டியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த மாணவியின் உறவினர்கள், நண்பர்கள் மருத்துவமனைக்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, மருத்துவமனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
காஷ்மீர் இளைஞர் கைது – பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த குற்றச்சாட்டு
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து தந்ததாக தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் ஆதரவாளர்கள் உதவியிருக்கிறார்களா என்பதை விசாரிக்கும் நிலையில், அந்த இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அவரை கைது செய்தனர். உள்ளூர் நபர்கள் இன்னும் யாரேனும் இதில் தொடர்புடையவர்களா என்பதை கண்டறிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
PUBG அடிமையால் 4 பேரைக் கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டு சிறை!
பாகிஸ்தானில், PUBG விளையாட்டில் தோல்வியால் விரக்தியடைந்த நிலையில், தாய் கண்டித்ததற்குக் கோபமடைந்த சிறுவன் ஜைன், துப்பாக்கியால் தன் தாயையும் 3 சகோதரர்களையும் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம், சிறுவனின் வயதை கருத்தில் கொண்டு மரண தண்டனை விதிக்காமல், 4 ஆயுள் தண்டனைகள் — மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்துள்ளது.
சென்னை போலீசாருக்கு ஆயுள் தண்டனை
சென்னை கோட்டூர்புரத்தில் 2009ஆம் ஆண்டு நடந்த மரண வழக்கில், முன்னாள் எஸ்.ஐ. மற்றும் 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குடிபோதையில் தகராறு செய்த பழனி என்ற நபர் காவல் நிலையம் சென்று வீடு திரும்பியதும் உயிரிழந்தார். இதையடுத்து ஆர்.டி.ஓ. விசாரணையில், போலீசார் தாக்கியதே மரணத்திற்குக் காரணம் என தெரியவந்தது. இதனால் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. அதன்பேரில் அப்போது எஸ்.ஐ.யாக பணியாற்றிய ஆறுமுகம்
அஜித் குமார் கொலை வழக்கு: சாட்சிகள் பாதுகாப்பில்
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் 5 போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சம்பவத்தின் பின்னர் போலீசார் சாட்சிகளின் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள், அலாரம், கதவு பாதுகாப்பு மற்றும் ரகசிய லென்ஸ் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கில் சாட்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
நீதிபதிக்கு எதிராக நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி மீது நிர்வாக நடவடிக்கை எடுக்க விசிலன்ஸ் பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, மாவட்ட நீதிபதி சங்கர் கணேஷுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்க தேவையான விசாரணையை உறுதி செய்வதற்காக அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் விசிலன்ஸ் பதிவாளர் சமர்பிக்கும் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு மற்றும்
காவல் உதவி ஆய்வாளர் கைது. பெண்ணை கொலை செய்ய முயன்றதால்.
தருமபுரி அருகே அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுடன், அங்கு பணியாற்றிய துணை காவல் ஆய்வாளர் (SSI) தவறான தொடர்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், அந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்த நிலையில், சம்பவம் வெளிச்சம் பார்க்காமல் தடுக்கும் நோக்கில் பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக குற்றம்
16 வயது சிறுவன் தாக்கப்பட்டு உயிரிழப்பு
சென்னை வில்லிவாக்கத்தில் வேகமாக பைக்கில் சென்றதால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 16 வயது சிறுவன் ஹர்ஷ வர்தன் கற்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூரைச் சேர்ந்த ஹர்ஷ வர்தன் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், 4 சிறுவர்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிலரை தேடிச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப்

