“ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவது வேதனை” – சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதை சென்னை உயர்நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது. கடலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயசூர்யா மரணம் ஆணவக் கொலைக்குச் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, அவரது தந்தை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இத்தகைய கொடூரச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது சமூகத்திற்கு பேராபத்து” எனக் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து, ஜெயசூர்யா மரணம் குறித்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி, விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்

Read More

சிறுமியை கடித்த ராட்விலர் நாய் : பரபரப்பு

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ராட்விலர் நாய் தாக்கியதில் சிறுமி கடுமையாகக் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் 7 வயது சிறுமி, வீட்டு முன்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென ராட்விலர் நாய் அவளைத் தாக்கியது. சிறுமியின் முகத்தில் கொடூரமாக கடித்த அந்த நாயின் வாயை பிளந்து, கஷ்டப்பட்டு தந்தை மகளைக் காப்பாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடுமையான காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த

Read More

மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – ஒப்பந்த காவலாளர் கைது!

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த ஒப்பந்த காவலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவரங்கள்: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த பெண்ணிடம், அங்கு பணியில் இருந்த ஒப்பந்த காவலாளி வடிவேல், பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, குற்றச்சாட்டில் சிக்கிய காவலாளர் வடிவேலை

Read More

முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி

பாலியல் வன்கொடுமை வழக்கு – முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி! இன்று தண்டனை அறிவிக்கிறது சிறப்பு நீதிமன்றம் பெங்களூரு: ஜேடிஎஸ் (ஜனதா தள செக்யுலர்) கட்சியின் இளம் தலைவரும், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இன்று (சனிக்கிழமை) அவருக்கு விதிக்கப்படும் தண்டனையை நீதிமன்றம் அறிவிக்க உள்ளது. வழக்கின் தொடக்கம்

Read More

23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயம்

மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி தகவல்: 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயம் போபால்: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மத்தியப் பிரதேசத்தில் 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது. அதில், 1,900-க்கும் மேற்பட்ட சிறுமிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போயுள்ளன. இந்த தகவல் வெளியான நிலையில், மாநில மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. மகளிர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மாயமான

Read More

தண்ணீர் லாரி விபத்து: ஒருவர் பலி, பெண் படுகாயம்

பூந்தமல்லி அருகே தண்ணீர் லாரி விபத்து: ஒருவர் பலி, பெண் படுகாயம் பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி, சாலையில் நடந்து சென்ற நபரை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அருகில் சென்ற ஒரு பெண் படுகாயம் அடைந்தார். அதே லாரி, கார் மற்றும் இருசக்கர வாகனத்திலும் மோதியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்துக்குப் பிறகு பொதுமக்கள் லாரி ஓட்டுநரை பிடித்து அருகிலிருந்த கம்பத்தில்

Read More

கொலைக்களமாக மாறிய தமிழகம் – 4 நாளில் 4 படுகொலை!

கொலைக்களமாக மாறிய தமிழகம் – 4 நாளில் 4 படுகொலை!   தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக நடந்துவரும் கொலைச் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை, திருப்பூர், நெல்லை, தாராபுரம் என பல்வேறு இடங்களில் நடந்த இந்த படுகொலைகள் சட்டம்-சமாதான நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளன.   🔹 காதல் தகராறு – மாணவர் கொலை சென்னை கே.கே.நகர் பகுதியில் மாணவர் ஒருவர் காரில் ஏற்றி கொலை செய்யப்பட்டார். திமுக

Read More

ஆணவக் கொலைக்கு எதிராக பா.ரஞ்சித் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞர் கவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த ஆணவக் கொலை குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது ஆழ்ந்த கவலைவை வெளிப்படுத்தியுள்ளார். தமிழக அரசுக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில், “திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடிக்கடி ஆணவச் சம்பவங்களும், வன்கொடுமைகளும் நடைபெற்று வருகின்றன. எனவே, இம்மாவட்டங்களை வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் ‘அடிக்கடி வன்கொடுமை நடைபெறும் பகுதிகள்’ (Atrocity Prone Areas)

Read More

Facebook