எஸ்.பி.கைது பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

கோவை, மார்ச் 15– கோவைப்புதூர் 4–வது பட்டாலியனில் பணியாற்றி வந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் எஸ்.பி. செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கோவைப்புதூர் 4–வது காவல் பட்டாலியனில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு, அதே பட்டாலியனில் பணியாற்றி வந்த எஸ்.பி. செந்தில்குமார் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர், சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

Read More

5 ஆண்டுகளில் 8,752 கொலைகள் – பெண்கள், குழந்தைகள் பலி:

சென்னை, மார்ச் 11: கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மொத்தம் 8,752 கொலைகள் நடந்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் அதிக கொலை வழக்குகள் பதிவான மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொலைகளில் 1,977 பெண்களும், 367 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். அதில் 38 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த

Read More

அரசு அலுவலகங்களில் அடையாள அட்டை அணியாத அதிகாரிகள் – பொதுமக்கள் அதிருப்தி.

சென்னை, மார்ச் 11: தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றும் சில அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தங்களது அடையாள அட்டையை (ID Card) கழுத்தில் தொங்கவிடாமல் பணியில் ஈடுபடுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள், தங்களது தேவைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க அதிகாரிகளை எளிதில் அடையாளம் காண முடியாத நிலை உருவாகியுள்ளது. பல அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களது அடையாள

Read More

‘போக்குவரத்து பிளாசா’ திட்டத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு! CRZ விதிகள் மீறல் குற்றச்சாட்டு – திட்டத்தை உடனே கைவிட மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

ராமநாதபுரம், மார்ச் 9: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளை மீறி அமைக்கப்பட உள்ள “போக்குவரத்து பிளாசா” (Transport Plaza) திட்டத்திற்கு எதிராக, அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்டத்தை உடனடியாக கைவிடக் கோரி இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் ஆட்சேபனை மனு அளித்தனர். திட்டத்தின் பின்னணி ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி சர்வே எண்

Read More

“ப்ரீ பையர்” கேம் பெயரில் சிறுவர்கள் ஆபாச வார்த்தைகள் – பெண்கள் நடமாட்டத்தில் அச்சம்; காவல்துறையிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சென்னை: வடசென்னையில் உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல குடியிருப்பு பகுதிகளில் சிறுவர்கள் “ப்ரீ பையர்” எனப்படும் ஆன்லைன் கேமை விளையாடும் போது, மிகவும் கொச்சையான மற்றும் ஆபாசமான வார்த்தைகளை உரக்கப் பயன்படுத்தி பேசும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பள்ளி வயதுடைய சிறுவர்கள் குழுக்களாகச் சேர்ந்து மொபைல் போன்களில் இந்த கேமை விளையாடும்போது, அதில் பயன்படுத்தப்படும் ஆபாசமான மற்றும் அருவருப்பான சொற்களை வெளிப்படையாகப்

Read More

மாநகரப் பேருந்தில் நடத்துநர் மீது நடவடிக்கை.

சென்னை: சென்னை மாநகரப் பேருந்தில் சில்லறை விவகாரம் தொடர்பாகப் பயணியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நடத்துநர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து போக்குவரத்து நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதுடன், கட்டணத்தை UPI மூலம் செலுத்த முன்வந்த பயணியிடம் ஒருமையில் பேசி அவமரியாதையாக நடந்துகொண்டதோடு, பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Read More

ரயில் நிலையத்தில் 41 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு.

சென்னை, மார்ச் 3: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் பயணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் 41 திருநங்கைகள் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரயில் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், சிலரிடம் ஆபாசமாக பேசி சிரமம் ஏற்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் அரசு ரயில்வே போலீசார் இணைந்து நிலைய வளாகத்தில் கண்காணிப்பு மேற்கொண்டனர். கண்காணிப்பின் போது, பயணிகளுக்கு இடையூறு

Read More

உடனடி நடவடிக்கை. போக்குவரத்து காவலர்கள்.

சென்னை: ஆர்.கே.நகர், தொகுதிக்குட்பட்ட வினோபா நகர் பகுதியில். பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவால், அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில். எச் 5 புது வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவலர்கள் அரை மணி நேரத்தில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோவை அப்புறப்படுத்தியதால், அப்பகுதி மக்கள் போக்குவரத்து காவலர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Read More

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து கடும் கண்டனம் – 90 சதவீதம் ஊழல்வாதிகள்.

சென்னை, பிப்.14: சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்யப்பட்ட ஒரு அவமதிப்பு மனுவை முடித்து வைத்து வழங்கிய தீர்ப்பில், நீதிபதி பி.வேல்முருகன் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கருத்துக்களை பதிவு செய்தார். தற்போதைய நிலையில் காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவோ அல்லது குற்றவியல் விசாரணைகளை திறம்பட நடத்த போதுமான திறன் இல்லாதவர்களாகவோ உள்ளனர் என்றும், 10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையும் திறமையும் கொண்டவர்களாக செயல்படுகின்றனர் என்றும்

Read More

Facebook