சென்னை, ஆக.30– சென்னை ஓட்டேரி பகுதியில், வீட்டை எழுதி தருமாறு உறவினரிடம் கோரிய வாலிபர், தகராறு காரணமாக அவரது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் வசந்தகுமார் (45), கார் டிரைவர். இவரது வீட்டின் மேல் தளத்தில் உறவினரான விக்னேஷ் (25) வசித்து வருகிறார். நேற்று அதிகாலை, மாடி பகுதியில் உள்ள வீட்டை தமக்கே எழுதி தருமாறு விக்னேஷ், வசந்தகுமாரிடம் கோரியுள்ளார். இதனை
Author: vnewstamil
இறுதி அறிக்கையை கண்காணிக்க தவறியதாக குற்றச்சாட்டு: 5 போலீஸ் சூப்பிரண்டுகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தடை.
சென்னை, ஆகஸ்ட் 30: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தவறிய விவகாரம் தொடர்பாக, 5 போலீஸ் சூப்பிரண்டுகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு முடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தாலும், அதற்கான இறுதி அறிக்கை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாதது விசாரணையின்
ஓய்வு பெறும் தமிழக டிஜிபி சங்கர் ஜீவா – புதிய பொறுப்பாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆணையராக நியமனம்
சென்னை: தமிழக காவல்துறையில் நீண்ட கால அனுபவமும் சிறப்பான சேவையும் ஆற்றிய மாநில காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) சங்கர் ஜிவால் அவர்கள், ஓய்வு பெற உள்ள நிலையில், தமிழக அரசு அவருக்கு புதிய பொறுப்பை வழங்கியுள்ளது. அவர், இனி தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை சேவையில் சிறப்பான பயணம் சங்கர் ஜிவால், இந்திய போலீஸ் சேவையில் (IPS) 1989-ம் ஆண்டு தமிழ்நாடு கேட்ரில்
முதல்வர் மு.க. ஸ்டாலின் – கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு
சென்னை: தமிழக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை அரசு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு அவர்களை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதல்வர், மருத்துவர்களிடம் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விரிவாக கேட்டறிந்து, அவருக்கு தேவையான அனைத்துவித சிகிச்சை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், நல்லகண்ணு
கொளத்தூரில் கல்லூரி கட்டும் நில விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
புதுடெல்லி, ஆக.30: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியிலிருந்து நடத்தப்பட்டு வரும் கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி, தற்போது கொளத்தூரில் இயங்கி வருகிறது. கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க, கொளத்தூர் சோமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் அரசாணை கடந்த ஆண்டு தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ், “கோவில் நிலத்தை கல்வி நிறுவனத்துக்கு குத்தகைக்கு
உடல் நலம் காக்கும் யோகா தியான பயிற்சி!
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை வெல்னஸ் கிளப், ஸ்கில் செட் அகாடமி சார்பில் உடல் நலம் காக்கும் யோகா , தியான பயிற்சி வகுப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி இணை முதல்வர் முனைவர் குமார் தலைமை வகித்தார். முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை தலைவர் முனைவர் மகேஸ்வரி துவக்க உரையாற்றினார். முனைவர் ஜான் பிரபாகரன், ரஜீஷ், லட்சுமி பிரியா,
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், பரனூர், மறைமலைநகர் பகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தின் திருமுல்லைவாயில் பகுதி மற்றும் சென்னை மாவட்டத்தின் நீலாங்கரை பகுதியில் நடைபெற்ற பல்வேறு இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில், திருமண விழாவில் பங்கேற்ற அவர் மணமக்கள் வாழ்வில் செழிப்பு நிலைத்திருக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் நலன்களை கேட்டறிந்தார். நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட
காவல்துறையினர் கடைகளை மூடச் சொல்வதாக.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சென்னை: தமிழக அரசின் உத்தரவின்படி 24 மணி நேரமும் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை இரவு நேரங்களில் கடைகளை மூடுமாறு மிரட்டுவதாக தேசிய ஓட்டல்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணையை மீறி கடைகள் மூடப்படக் கூடாது என்று தெளிவுபடுத்தியது. மேலும், அனைத்து காவல் நிலையங்களுக்கும் அரசாணை தொடர்பான தகவலை உடனடியாக அறிவிக்க சென்னை
நாணயங்கள் சேகரிப்பில் ஈடுபடும் திருநங்கையர்!
திருநங்கையர் எனும் மூன்றாம் பாலினத்தவர் கல்வியறிவு பெற்று, மற்றவர்களுக்கு இணையாகப் பல்வேறு துறைகளில் முன்னேறி வருவது வரவேற்கத்தக்கது. இன்றளவும் சமூகத்தில் அவர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன. கரூர் அரசு காலனியை சார்ந்த திருநங்கை இமயா நாணயங்கள் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சேகரிப்பு கலையில் ஈடுபட்டு வரும் இமயா திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் அமைத்துள்ள நூலகம் மற்றும் புழங்கு பொருட்கள்
பாளையக்காரர்கள் காசுகளில் கணபதி
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாளையக்காரர்கள் காசுகளில் கணபதி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், சுடுமன் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் பாளையக்காரர்கள்

