சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டு வந்த திடக்கழிவுகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட பயோமைனிங் முறையின் மூலம் இதுவரை சுமார் 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மொத்தம் 66.52 லட்சம் டன் குப்பைகளை அகற்றும் பணியில், நிலம் மீட்கப்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை பசுமையாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட நிலத்தில் பாதுகாப்பு வேலி அமைத்து, பாசன வசதியுடன் இதுவரை சுமார் 15,000
Author: vnewstamil
உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறு ஓர் பார்வை! ஓர் பயணம்!
திருச்சியில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறு ஓர் பார்வை! ஓர் பயணம்! திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு சார்பில் திருச்சியில் திருச்சியில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறு ஓர் பார்வை, ஓர் பயணம் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது . தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்க மாநில தலைவர் பன்னீர்செல்வம், மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொதுச்
திருச்சியில் மகாத்மா காந்தி ஓர் பார்வை! ஓர் பயணம்!
திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு சார்பில் திருச்சியில் மகாத்மா காந்தி ஓர் பார்வை, ஓர் பயணம் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் குடியரசு இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி பள்ளி மாணவர் விஷ்வா உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி காந்தி சந்தை
மாணவர்கள் கையில் “பாலம் வேண்டும்” பதாகைகள் உடன் கலெக்டரை சந்தித்த மாணவர்கள் !!!!
காவேரிப்பாக்கம் பாசன கால்வாயை கடக்க பாலம் அமைத்து தர வேண்டி மாணவர்கள் கையில் பாலம் வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு வந்து மனு அளித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சித்தஞ்சி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பாசன கால்வாய் கடந்து செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் என கூறி, பதாகைகளை ஏந்தி எவ்வாறு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். காவேரிப்பாக்கம்
துணிப் பைகளை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் திருச்சி மேலப்பாண்டமங்கலம் ஆர் தயாநிதி நினைவு வித்யாசாலா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் துணிப்பைகளை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும்
கருவின் பாலினத்தை தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு சீல்!
சேலம் எடப்பாடியில் கருவின் பாலினத்தை தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு சீல்! சேலம் மாவட்டம் எடப்பாடியில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கர்ப்பிணிப் பெண் ஒருவரை ஸ்கேன் செய்ய அனுப்பி வைத்த நிலையில், திடீரென உள்ளே நுழைந்த அதிகாரிகள், மருத்துவமனையின் செயல்பாடுகளை சோதனை செய்தனர். இதில், மருத்துவர் கண்ணன், அவரது மனைவி ஜோதி
நாகர்கோவில் சிறையில் கைதிகள் மோதல் – 2 பேர் காயம்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் கைதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பேச்சியப்பன், முத்துராஜ் ஆகிய இருவரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக 13 கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் தமிழக வெற்றி கழக பிரசார கூட்டத்தில் பரிதாபம் – 36 பேர் பலி
கரூர் மாவட்டம் வெலுசாமிபுரத்தில் நடிகர்-அரசியல்வாதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சார்பில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பரிதாபகரமான சம்பவம் ஏற்பட்டது. பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளியதால் பலர் தரையில் விழுந்து மிதிபட்டு உயிரிழந்தனர். ஆரம்ப தகவலின்படி 36 பேர் பலியானதுடன், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரில் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியரும் அடங்குகின்றனர். சம்பவம் குறித்து அரசு உயர்
காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 6-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு – சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை
சென்னை, செப்.27– காலாண்டுத் தேர்வு கடந்த 10-ந்தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவுற்றது. தேர்வுக்குப் பிறகு வழங்கப்படும் காலாண்டு விடுமுறை, பள்ளிக் கல்வியாண்டு நாட்காட்டியின் படி இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் அக்டோபர் 6-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இடைப்பட்ட காலத்தில் ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி போன்ற அரசு விடுமுறைகளும் சேர்வதால், இந்த ஆண்டு
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் நிரந்தரமாக நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த என். செந்தில்குமார், ஜி. அருள்முருகன் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில், நேற்று இருவரும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஜெ.

