அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டார்!
ராணிப்பேட்டையில் நடைபெற்ற ராஜாதேசிங் ராஜ்புத் பொந்தில் சேனாவின் சமூக நலச்சங்கம் சார்பில், ராஜாதேசிங் மற்றும் ராணிபாய் அவர்களுக்கு சாந்தி ஓமம் மற்றும் வஸ்திரதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாநில பொருளாளர் சி. பாலாஜிசிங் அவர்கள் எழுதிய “செஞ்சியை ஆண்ட இராஜபுத்திர பொந்தில் மன்னர்கள்” என்ற புத்தகத்தை, தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் வெளியிட்டு வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் பி. பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ். வினோத் (MC), நகர துணை செயலாளர் மற்றும் நகர ஒன்றிய மாவட்ட சொந்தங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியின் செய்தி மற்றும் விளம்பர ஒருங்கிணைப்பாளராக மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்.ஜே. சுரேஷ் செயல்பட்டார்.
📞 செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 91502 23444

