ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், பள்ளி
கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4வது மாபெரும் புத்தகத்திருவிழா !!!
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ராணிப்பேட்டை நகராட்சி, வாரச்சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி
கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 60க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட 4வது மாபெரும் புத்தகத்
திருவிழா தொடங்கி வைத்து 107 பயனாளிகளுக்கு 163 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர்
முனைவர்.ஜெயுசந்திரகலா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன்ஜமால் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர்
செ.தனலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

