தஷ்வந்த் மரண தண்டனை ரத்து – உடனடி விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தஷ்வந்த் மரண தண்டனை ரத்து – உடனடி விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னை:

போரூர் அருகே 6 வயது சிறுமி ஹாசினியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 அன்று முகலிவாக்கம் பகுதியில் வசித்த ஹாசினி காணாமல் போனார். மூன்று நாட்களுக்கு பிறகு, போலீசார் அந்த சிறுமியின் எரிந்த உடலை ஒரு பயணப் பையில் அடைத்து கண்டுபிடித்தனர். இதையடுத்து, பக்கத்து வீட்டில் வசித்த 23 வயதான தஷ்வந்த் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் நடத்திய விசாரணையில், ஹாசினியை வன்கொடுமை செய்து கொன்றது நிரூபணமானதாகக் கருதப்பட்டதால், 2018 பிப்ரவரி 19 அன்று தஷ்வந்துக்கு 46 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

ஆனால், தஷ்வந்த் தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், வழக்கின் சாட்சியங்கள் மற்றும் விசாரணை நடைமுறைகளை ஆராய்ந்த உச்சநீதிமன்றம், தண்டனையில் சட்ட ரீதியான குறைகள் உள்ளன என்று குறிப்பிட்டு, மரண தண்டனையை ரத்து செய்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook