காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர் !
திருச்சி தேவராயநேரி செல்லும் பிரிவு சாலை அருகே பெயர் விலாசம் தெரியாதவர் சுற்றித்திரிந்த அறுபது வயது மதிக்கத்தக்க ஆண் நபர் உடல் நிலை சரியில்லாமல் இருக்கையில் அருகில் இருந்தவர்கள் உடல்நிலை பாதித்தவர் உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இறந்த நபர் மாநிறம் கொண்டவர். முக அமைப்பு கூர்நோக்கு முகம். சுமார் ஐந்து அடி உயரம் கொண்ட நபர் கருப்பு மற்றும் வெள்ளை கலந்த முடியுடன் காணப்பட்டார். லைட் பிரவுன் கலர் சட்டை கருப்பு மற்றும் நீளம் கலந்த கட்டம் போட்ட கைலி அணிந்து இருந்தார். இறந்த நபர் உடல் கூராய்வு செய்யப்பட்ட நிலையில் யாரும் உடலை உரிமை கோராத நிலையில் திருச்சி துவாக்குடி காவல் நிலைய முதல் நிலை காவலர் துரை செபாஸ்டின் நல்லடக்கம் செய்வதற்காக அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் உதவி ஆய்வாளர் இளங்கோவன் முதல் நிலை காவலர் துரை செபாஸ்டின் முன்னிலையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

