ராணிப்பேட்டை, செப் 3 – நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி கந்தசாமி தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் புதனன்று (செப் 3) மாவட்டத் துணை அமைப்பாளர் கே. பிச்சாண்டி தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மணிகண்டன், தாலுகா செயலாளர் ஜி. மதியழகன், விதொச மாவட்ட தலைவர் டி. சந்திரன். சிபிஎம் ஆற்காடு தாலுகா குழு உறுப்பினர்கள் விஜயன், கன்னியப்பன், சங்கத்தின் மாவட்டத் துணை அமைப்பாளர்கள் கே. ஜானகிராமன், கே. கிருஷ்ணமூர்த்தி, காவனூர் துணைத் தலைவர் ஜி. சிங்காரவேலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி முழக்கங்களை எழுப்பினர்.
மாவட்ட செய்தியாளர்: ஆர்.ஜே.சுரேஷ் 9150223444.

