சென்னை, செப்.1:
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (செவ்வாய்க்கிழமை) 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். சென்னைக்கு வருகை தரும் அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொள்கிறார்.
பின்னர் கவர்னர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி, மறுநாள் திருச்சியில் நடைபெறும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார். மேலும் ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்த பின் டெல்லி புறப்படுகிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சென்னையில் டிரோன் பறக்க போலீசார் தடை விதித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

