அத்துமீறிய போலீசார் கைது. பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது..

அத்துமீறிய போலீசார் கைது. பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது..

அத்துமீறிய போலீசார் கைது.

பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது..

 

 

திருநெல்வேலி, மார்ச் 27:

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக வந்த மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார் மீது பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 2 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருநெல்வேலியில் நடைபெறவுள்ள தேர்தல் பணிக்காக மணிமுத்தாறு பட்டாலியனை சேர்ந்த போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அப்போது பிரான்சிஸ் மற்றும் சேதுபதி ராஜா ஆகியோர் நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு பணியில் இருந்த பெண்களிடம் அவர்கள் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து பிரான்சிஸ் மற்றும் சேதுபதி ராஜா ஆகிய 2 போலீசாரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook