ராணிப்பேட்டை அருகே மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சூலாயுதத்தைக் கொண்டு ஒருவரை ஆக்ரோஷத்தோடு வதம் செய்யும் தத்ரூபமான காட்சியை கூடியிருந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் பெங்களூர் செல்லும் பழைய பேருந்து நிலையத்தில் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு பிஞ்சி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக அம்மன், சிவன், வராஹி, அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் சிலைகளை பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டது..
மேலும் வைக்கப்பட்ட இடத்தில் ஆக்ரோஷத்தோடு அம்மன் பனிமலையில் அமர்ந்தபடி ஆக்ரோஷத்தோடு எழுந்து நின்று ஒருவரை சூலாயுதம் கொண்டு வதம் செய்யும் தத்ரூமான காட்சியை அங்கு கூடியிருந்த ஏராளமான பொதுமக்களுக்கும் சாலையில் நின்றபடி கண்டுகளித்து ரசித்தனர் தொடர்ந்து இளைஞர்கள் ஏராளமானோர் வாணவேடிக்கை மற்றும் பட்டாசு வெடித்தும் உற்சாகத்துடன் மயானக்கொள்ளை திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444.