தமிழகம் முழுவதும் உள்ள ‘ஆர்டர்லி’ போலீசார் திரும்பப் பெற உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள ‘ஆர்டர்லி’ போலீசார் திரும்பப் பெற உத்தரவு

உயர் அதிகாரிகள் வீடுகளில் பணியாற்றும் போலீசார் மீண்டும் காவல் பணிக்கு

சென்னை, டிசம்பர் 16:

தமிழகம் முழுவதும் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளில், வீட்டு வேலை ஆட்களாக ‘ஆர்டர்லி’ போலீசார் பயன்படுத்தப்பட்டு வரும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக காவல்துறை தலைமை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக காவல்துறை டி.ஜி.பி. (பொறுப்பு) அபய்குமார் சிங், அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் சிறப்பு பிரிவு தலைவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி, அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளில் ‘ஆர்டர்லி’யாக பணியாற்றும் போலீசாரை உடனடியாக திரும்பப் பெற்று, அவர்கள் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

5 முதல் 20 பேர் வரை ‘ஆர்டர்லி’

தற்போது ஒவ்வொரு காவல்துறை உயர் அதிகாரியும் தங்களது வீடுகளில் 5 முதல் 20 போலீசார் வரை ‘ஆர்டர்லி’யாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் தொடர்ந்தால், சுமார் 8 ஆயிரம் போலீசார் வரை இவ்வகையில் பயன்படுத்தப்பட்டு வரலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை

போலீசார் பொதுப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு போன்ற முக்கிய பணிகளில் ஈடுபட வேண்டிய நிலையில், தனிப்பட்ட வீட்டு பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவது குறித்த விமர்சனங்கள் நீண்ட காலமாக எழுந்து வந்தன. இதனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் பல தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டது.

காவல்துறையில் பரபரப்பு

இந்த பின்னணியில் வெளியான டி.ஜி.பி.யின் உத்தரவு, காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், மனிதவளப் பயன்பாடு சீர்படுத்தப்பட்டு, காவல் பணிகள் மேலும் பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook