நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலைய பெண்கள் கழிப்பறையில் மது பாட்டல்கள் கண்டெடுப்பு!

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலைய பெண்கள் கழிப்பறையில் மது பாட்டல்கள் கண்டெடுப்பு!

நாகர்கோவிலில் உள்ள மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் பெண்கள் கழிப்பறையில், கடந்த சில தினங்களாக மது பாட்டல்கள், கப்கள் பெருமளவில் காணப்படுவதால் பொதுமக்களில் அதிர்ச்சி மற்றும் கண்டனம் கிளம்பியுள்ளது.

அன்றாடம் பொதுமக்கள் – குழந்தைகள், முதியோர், நோயாளிகள் உள்ளிட்ட பலர் பயன்படுத்தும் இந்த கழிப்பறையில், இத்தகைய செயற்பாடுகள் நடைபெறுவது சமூக ஒழுக்கத்திற்கே பெரும் சவால் எனக் கூறப்படுகிறது.

சிலர், திருநங்கைகளுக்கு தனி வசதிகள் இல்லாததால் பெண்கள் கழிப்பறையில் வந்து மது அருந்துவதாகக் கூறுகின்றனர். எனினும், இது ஒருசிலரின் தனிப்பட்ட ஒழுக்க சீர்கேட்டையே வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நாகரிக முன்னேற்றம் என்ற பெயரில், பொது இடங்களில் இவ்வகை செயல்கள் தொடருமானால், அது சமூகத்தையே பாதிக்கும் நிலைக்கு செல்லும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook