ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சுவாமி திருக்கோவிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு மூலவர், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி ,வள்ளி, தேவசேனா சுவாமிக்கும் பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து, பட்டு வஸ்திரம் மலர்மாலை பல மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீப ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் சுவாமி எழுந்தருளி கிரிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். இந்த பூஜையில் 20 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.9150223444

