ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி மருத்துவாம்பாடி கிராம தேவதை அருள்மிகு
ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ பிள்ளையார், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ பஜனை கோயில்,
ஸ்ரீ சாய் பாபா,
ஸ்ரீ நவகிரகம் ஆகிய திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேகம் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக யாகசாலைகள் அமைத்து பல்வேறு ஓம திரவியங்கள் கொண்டு வேள்வி பூஜை செய்த புனித கலச நீர் கோபுரத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் அன்னதானமும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் (91502234
44).